ரோஜாவை வைத்து பலான படம் எடுக்க ரெடி: இயக்குனர் சர்ச்சை பேச்சு
Recommended Video

ஹைதராபாத்: ரோஜாவை வைத்து பலான படம் எடுப்பேன் என தெலுங்கு இயக்குனர் அஜய் கவுந்தின்யா தெரிவித்துள்ளார்.
சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா ஆபாசப் பட நடிகையான மியாவை மல்கோவாவை வைத்து காட், செக்ஸ் அன்ட் ட்ரூத் என்ற பலான படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.
அந்த படத்தை பலரும் பார்த்துவிட்டு சூப்பர் என்று ராம் கோபால் வர்மாவிடம் தெரிவித்துள்ளனர்.

இசை வெளியீடு
அஜய் கவுந்தின்யா இயக்கியுள்ள பூத் பங்களா படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. அந்த விழாவில் பேசிய அஜய் நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரோஜாவை விமர்சித்துள்ளார்.

விளாசல்
தெலுங்கு சினிமா துறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெக்னீஷியன்கள் உள்ளனர். படம் மூலம் தினமும் சம்பளம் வாங்கி வாழ்க்கை நடத்துபவர்கள் உள்ளனர். அவர்களின் பிரச்சனைகளை ரோஜா கண்டுகொள்வதே இல்லை என அஜய் தெரிவித்துள்ளார்.

ஏன்?
ரோஜா ஏன் தெலுங்கு திரையுலகம் பற்றி பேசுவது இல்லை. நாடு முழுவதும் பிற துறைகளில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை பற்றி பேசும் ரோஜா சினிமா பற்றி மட்டும் வாய் திறப்பது இல்லை என்கிறார் அஜய்.
ஜிஎஸ்டி 2
ராம் கோபால் வர்மா வெளிநாட்டு நடிகையை வைத்து காட், செக்ஸ் அன்ட் ட்ரூத் எடுத்தால் நான் ரோஜாவை வைத்து காட், செக்ஸ் அன்ட் ட்ரூத் 2 படத்தை எடுக்க ரெடி என்று தெரிவித்துள்ளார் அஜய்.

ரோஜா
அஜய் பேசிய பேச்சு தெலுங்கு திரையுலகினரை அதிர வைத்துள்ளது. இதற்கு ரோஜா என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











