"தேர்தல் நேர்மையாக நடந்தால் சந்திக்க தயார்"... ஐசரி கணேஷ் சொல்றதுல ஏதாவது உள்குத்து இருக்குமோ!

சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் நேர்மையாக நடந்தால் அதனை சந்திக்க தயார் என சுவாமி சங்கரதாஸ் அணி தெரிவித்துள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ம் தேதி சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்தப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் விஷால், நாசர் தலைமையிலான பாண்டர் அணியை எதிர்த்து, பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகிறது.

Ready to Face the election: Isari Ganesh

இந்த நிலையில் உறுப்பினர்களை நீக்கிய விவகாரத்தை காரணமாகக் கூறி தேர்தலை ரத்து செய்தார் மாவட்ட பதிவாளர். இதனை எதிர்த்து, விஷால் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரத்து நடத்த அனுமதி அளித்து.

இந்நிலையில் பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் உள்ளிட்ட சுவாமி சங்கரதாஸ் அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய ஐசரி கணேஷ், பல இடங்களுக்கு தபால் ஓட்டுகள் இன்னும் போய் சேரவில்லை என்றார். நடிகர் ரஜினிக்கே இன்னும் சென்று சேரவில்லை எனக்கூறினார்.

மேலும், தேர்தல் எந்த இடத்தில் நடந்தாலும், நேர்மையாக நடக்கும் பட்சத்தில் அதனை சந்திக்க தயார். தபால் வாக்குகள் சென்று சேருவதற்காக கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் ஐசரி கணேஷ் கேட்டுக்கொண்டார்.

ஐசரி கணேஷ் சொல்லுவதை பார்த்தால், சுவாமி சங்கரதாஸ் அணி ஏதோ பெரிய திட்டத்துடன் தான் இருக்கிறது என்பது புரிகிறது. நாளை வாக்குப்பதிவின் போது தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை எனக்கூறி தேர்தலை நிறுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் தான் நடிகர் சங்கத் தேர்தல் நடத்தப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மாற்று இடம் அறிவிக்கப்பட உள்ளது. சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் நேர்மையாக நடந்தால் அதனை சந்திக்க தயார் என சுவாமி சங்கரதாஸ் அணி தெரிவித்துள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ம் தேதி சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்தப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் விஷால், நாசர் தலைமையிலான பாண்டர் அணியை எதிர்த்து, பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகிறது.

இந்த நிலையில் உறுப்பினர்களை நீக்கிய விவகாரத்தை காரணமாகக் கூறி தேர்தலை ரத்து செய்தார் மாவட்ட பதிவாளர். இதனை எதிர்த்து, விஷால் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரத்து நடத்த அனுமதி அளித்து.

இந்நிலையில் பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் உள்ளிட்ட சுவாமி சங்கரதாஸ் அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய ஐசரி கணேஷ், பல இடங்களுக்கு தபால் ஓட்டுகள் இன்னும் போய் சேரவில்லை என்றார். நடிகர் ரஜினிக்கே இன்னும் சென்று சேரவில்லை எனக்கூறினார்.

மேலும், தேர்தல் எந்த இடத்தில் நடந்தாலும், நேர்மையாக நடக்கும் பட்சத்தில் அதனை சந்திக்க தயார். தபால் வாக்குகள் சென்று சேருவதற்காக கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் ஐசரி கணேஷ் கேட்டுக்கொண்டார்.

ஐசரி கணேஷ் சொல்லுவதை பார்த்தால், சுவாமி சங்கரதாஸ் அணி ஏதோ பெரிய திட்டத்துடன் தான் இருக்கிறது என்பது புரிகிறது. நாளை வாக்கிப்பதிவின் போது தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை எனக்கூறி தேர்தலை நிறுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் தான் நடிகர் சங்கத் தேர்தல் நடத்தப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மாற்று இடம் அறிவிக்கப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X