twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரியோ முதலில் சேவ் ஆக இதுதான் காரணம்.. அர்ச்சனா, பாலா மற்றும் ரம்யாவுக்கு விபூதி அடிச்ச கமல்!

    |

    சென்னை: பிக் பாஸ் ரூல் புக்கை தாண்டி புதுசா ஒரு ரூல் போட்டு விளையாடிய அர்ச்சனா, ரம்யா மற்றும் பாலாவுக்கு விபூதி அடிக்கும் விதமாக சனிக்கிழமை எபிசோடில் ரியோ மற்றும் பாலாவை முதலில் சேவ் செய்துள்ளார் கமல்.

    Recommended Video

    Yashika opens on her relationship with Bigg Boss Balaji Murugadoss

    ஆரி சேவ் ஆனதை அர்ச்சனா, பாலா மற்றும் ரம்யாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

    ரியோவையும் ஆரியையும் கமல் ஏன் முதலில் சேவ் செய்தார் என்பதை விரிவாக இங்கே காண்போம்.

    கடவுள் இருக்கானா குமாரு.. ஆரி சேவ் ஆனதும் கிண்டலாக பேசிய அர்ச்சனா.. இந்நேரம் தெரிஞ்சிருக்கும்!கடவுள் இருக்கானா குமாரு.. ஆரி சேவ் ஆனதும் கிண்டலாக பேசிய அர்ச்சனா.. இந்நேரம் தெரிஞ்சிருக்கும்!

    செல்லப்பிள்ளை ரியோ

    செல்லப்பிள்ளை ரியோ

    விஜய் டிவி புராடக்ட், விஜய் டிவியின் செல்லப்பிள்ளை ரியோ என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் ரியோ மீது வைக்கப்படுகிறது. இந்த சீசன் பிக் பாஸில் முக்கால்வாசி பேர் விஜய் டிவி தொடர்புடையவர்கள் தான். அந்த காரணத்திற்காகத்தான் சனிக்கிழமை எபிசோடில் முதல் ஆளாக கமல் ரியோவை சேவ் செய்தார் என்கிற பகிரங்க குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இதுதான் காரணம்

    இதுதான் காரணம்

    ஆனால், சனிக்கிழமை நிகழ்ச்சியில் அந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, இந்த் வாரம் நடந்த கோழிப் பண்ணை டாஸ்க்கில் கடைசி வரை நேர்மையுடன் விளையாடியது ரியோ தான் என்றும் அதனால் தனக்கு காசு சேர வில்லை என்றால் கூட பரவாயில்லை என விளையாடிய ரியோவின் நேர்மை தான் அவரை இந்த வாரம் முதலில் சேவ் செய்தது.

    ஆதங்கப்பட்ட ஆரி

    ஆதங்கப்பட்ட ஆரி

    அதே போல் தான் ஆரியை மற்ற போட்டியாளர்கள் தனித்து விட்டனர். அவர் தனக்கு ஏன் நியாயம் கிடைக்கவில்லை என்கிற கேள்விக்கு யாருமே பதில் சொல்லாமல், நீங்களும் தானே தப்பு பண்ணீங்க என அவரையும் அவர்கள் செய்த தவறில் ஒருவராக மாற்றவே முயற்சிகளை மேற்கொண்டனர்.

    மூன்று பேருக்கு பாடம்

    மூன்று பேருக்கு பாடம்

    பாலா, ரம்யா மற்றும் அர்ச்சனா ஆகிய மூன்று பேரும் தான் கோழிப் பண்ணை டாஸ்க் ரூலை தங்கள் இஷ்டத்துக்கு வளைத்து விளையாடினர். பாலா மணி மைண்டடாக விளையாடியதால் அதிக பணம் சேர்த்தார். இன்றைய எபிசோடில் ஆரியையும் ரியோவையும் சேவ் பண்ணி பாலா, ரம்யா மற்றும் அர்ச்சனாவுக்கு கமல் மறைமுகமாக புகட்டிய பாடம் புரிந்ததா என்று கூட தெரியவில்லை.

    எவிக்‌ஷனுக்கு பிறகு புரியும்

    எவிக்‌ஷனுக்கு பிறகு புரியும்

    கோழி தனது முட்டையை நரியிடம் கொடுத்து காசு வாங்கி சம்பாதிக்கும் ஆட்டத்தை ஆடியவர்களுக்கு ரியோவும் ஆரியும் எடுத்து சொன்னது அர்ச்சனாவின் எவிக்‌ஷனுக்கு பிறகு புரியும் என்றே தெரிகிறது. அர்ச்சனா எவிக்‌ஷனை நினைத்து சந்தோஷப்பட்டாலும், ஆஜீத், கேபி, ஷிவானி இன்னமும் உள்ளே இருக்கிறார்கள் என்பதை நினைத்து ரசிகர்கள் ரொம்பவே வருத்தப்படுகிறார்கள்.

    English summary
    Kamal wish to housemates understood why Rio Raj saved first and Aari saved second for this week episode. But Archana criticize Kamal's decision of saving after the saturday episode.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X