Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என்னது, சில்க் ஸ்மிதாவுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதா?
சென்னை: மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் பெயரில் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆதார் அட்டை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் பல சலுகைகளை பெற முடியாத நிலையில் உள்ளோம். ஆதார் அட்டை இல்லாதவர்கள் தற்போது விண்ணப்பித்து வருகிறார்கள்.
இந்த காரணத்தால் தற்போதும் ஆதார் மையங்களில் கூட்டமாக உள்ளது.
சில்க் ஸ்மிதா
கால் கடுக்க ஆதார் மையங்களில் வரிசையில் நின்று மக்கள் விண்ணப்பிக்கிறார்கள். இந்நிலையில் 1996ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆதார்
சில்க் ஸ்மிதா குடியிருந்த சென்னை வீட்டு முகவரிக்கு அவரது இயற்பெயரான விஜயலட்சுமி என்ற பெயரில் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எப்படி?
ஆதார் அட்டையில் கை விரல் ரேகை, கண்ணின் கருவிழி எல்லாம் இருக்கும்போது உயிரோடு இல்லாத சில்க் ஸ்மிதாவுக்கு எப்படி அட்டை வழங்கப்பட்டது என்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.
டோணி
கிரிக்கெட் வீரர் டோணியின் ஆதார் அட்டை தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபலத்தின் தகவல்களே வெளியாகிறது என்றால் சாதாரண நபர்களின் தகவல்களை சொல்லவா வேண்டும் என்று வியந்த நிலையில் உயிரோடு இல்லாத சில்கிற்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதே?