Don't Miss!
- News நிர்மலா கிட்ட காசு இல்லை.. அப்ப தமிழிசையிடம் பணமிருக்கா? நிதியமைச்சர் மீது பாய்ச்சல்? யார்னு பாருங்க
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரொம்ப சாரி சாரி சாரி: மன்னிப்பு கேட்ட இயக்குனர் ராஜேஷ்
சென்னை: கடவுள் இருக்கான் குமாரு படத்தின் மூலம் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில் அஜீத், விஜய், ஸ்ருதி ஹாஸன், லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி என ஏகத்திற்கும் கலாய்த்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து ராஜேஷ் கூறுகையில்,
தியேட்டர்
கடவுள் இருக்கான் குமாரு படத்தை தியேட்டரில் பார்த்தால் ஜாலியாக சந்தோஷமாக இருக்கும். இந்த படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஸ்ருதி
இந்த படத்தில் யார் மனதையும் புண்புடுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. சிம்பு சாரையோ, ஸ்ருதி ஹாஸனையோ ஹர்ட் பண்ணனும்னு நினைக்கவில்லை.
சாரி சாரி
இது ஒரு ஃபன் படம். யார் மனதையும் காயப்படுத்தும் எண்ணம் இல்லை. அப்படி இருந்தும் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் ரொம்ப சாரி சாரி சாரி.
இளைஞர்கள்
கடவுள் இருக்கான் குமாரு படம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. நான் அனைத்து விமர்சனங்களையும் எடுத்துக் கொள்வது இல்லை. ஏன் என்றால் விமர்சிப்பது எளிது. சினிமா படம் பண்ணுவது கடினம்.