Just In
- 8 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 9 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 9 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 11 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மறைந்த பிரபல வில்லன் நடிகர் சிலையின் கையில் இருந்து வடிந்த ரத்தம்.. கேரளாவில் பரபரப்பு!
திருவனந்தபுரம்: கலாபவன் மணியின் சிலையில் இருந்து ரத்தம் வடிந்ததாக பரவிய புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடம் என சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கலாபவன் மணி. இவர் கடந்த 2016ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார்.
முதலில் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. பின்னர் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, அது பற்றிய விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, கடந்த வருடம் கலாபவன் மணியின் சொந்த ஊரில் அவருக்கு குடும்பத்தாரும், ரசிகர்களும் சேர்ந்து சிலை ஒன்றை வைத்தனர்.
இந்த 'வாட்டர்பேபி' அலம்பல் தாங்கலையே.. அடுத்தடுத்து பிகினி போட்டோவா போட்டு தாக்குறாங்களே!

ரத்தம்?
இந்நிலையில் அந்த நிலையில் தற்போது சிவப்பு நிறத்தில் ரத்தம் வடிவதாக சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. வைரலாகிய அந்தப் புகைப்படங்களால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தகவல் அச்சிலை செய்தவரின் காதுகளையும் எட்டியது.

நேரில் ஆய்வு:
அவர் உடனடியாக அந்தச் சிலையை நேரில் வந்து ஆய்வு செய்தார். அதில், சிலையில் இருந்து சிவப்பு நிறத்தில் வெளிவந்த திரவம் ரத்தம் இல்லை என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர் அளித்த விளக்கத்தில், ‘சிலையின் உள்ளே இரும்பு ராடுகள் உள்ளன.

கேரள வெள்ளம்:
கடந்தாண்டு கேரளாவில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், உள்ளிருக்கும் அந்த ராடுகள் துருப்பிடித்துள்ளன. தற்போது வெளியில் இருக்கும் பைபர் வெயிலுக்கு உருக ஆரம்பித்துள்ளது. இதனால், துருவும் அதனுடன் சேர்ந்து சிவப்பு நிறத்தில் திரவம் வெளிவந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

குழப்பத்திற்கு பதில்:
சிற்பியின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, இந்த சிலை விவகாரத்தில் மக்களுக்கு ஏற்பட்ட குழப்பத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது. இதனால் அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனாலும், ஆரம்பத்தில் அப்படி ஒரு புகைப்படத்தை பார்த்ததால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.