Don't Miss!
- Sports SRH vs RCB: இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தாத்தா வயதிலும் ஹீரோவாக நடிக்கிறார்கள்: யாரை சொல்கிறார் நடிகை ரீமா கல்லிங்கல்?
Recommended Video
திருவனந்தபுரம்: நடிகர் 70 வயது தாத்தாவாகவே ஆனாலும் அவருக்காக கதை எழுதுகிறார்கள். ஆனால் நடிகைகளுக்கு அப்படி இல்லையே என்று ரீமா கல்லிங்கல் தெரிவித்துள்ளார்.
ஹீரோயினுக்கு திருமணமானால் அவரது மார்க்கெட் பாதிக்கப்படுகிறது. குழந்தை பிறந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் இது குறித்து திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ரீமா கல்லிங்கல் பேசியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியிருப்பதாவது,
பெண்கள்
சமூக வலைதளங்களில் பெண்களை அவமதிப்பது அதிகரித்துள்ளது. ஒரு நடிகையின் ஃபேஸ்புக் பக்கத்தில் கமெண்ட் பகுதிக்கு சென்று பார்த்தால் தெரியும். நாங்கள் என்ன உடை அணிய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்தியிருப்பார்கள்.
சம்பளம்
நடிகர்கள் வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு தான் எங்களுக்கு கிடைக்கிறது. கேட்டால் சாட்டிலைட் உரிமம் உள்ளிட்ட விஷயங்களில் எங்களுக்கு மதிப்பே இல்லை என்கிறார்கள்.
கதாபாத்திரம்
ஒரு நடிகர் 20 முதல் 70 வயதாக இருந்தாலும், திருமணமாகியிருந்தாலும் சரி ஆகவில்லை என்றாலும் சரி, குழந்தைகள் ஏன் பேரக் குழந்தைகள் இருந்தாலும் சரி அவர்களுக்காக கதை எழுதுகிறார்கள். அவரின் கெரியரை உயர்த்த படம் எடுக்கிறார்கள். அதற்காக ஒரு கலைஞராக சந்தோஷப்படுகிறேன். ஆனால் ஒரு நடிகையாக சந்தோஷப்பட முடியவில்லை.
படம்
ஒரு நடிகை தனது சொந்த வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவரின் சினிமா வாழ்க்கையை பாதிக்கிறது. திருமணமானால், விவாகரத்தானால், குழந்தை பெற்றால் என்று என்ன செய்தாலும் கெரியரை பாதிக்கிறது என்றார் ரீமா.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!