Don't Miss!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
சிரஞ்சீவி மருமகனை காதலிக்கிறாரா ரெஜினா?
Recommended Video
ஹைதராபாத்: நடிகை ரெஜினாவும், நடிகர் சாய் தரம் தேஜும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து தேஜ் விளக்கம் அளித்துள்ளார்.
பிள்ளா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் நடித்ததில் இருந்தே ரெஜினா கசான்ட்ராவுக்கும், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுன் சகோதரியின் மகனும், நடிகருமான சாய் தரம் தேஜுக்கும் இடையே காதல் என்று பேசப்படுகிறது.
2014ம் ஆண்டில் இருந்தே அவர்களுக்கு இடையே காதல் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
என்னால் முடியல: அஜித் மீது பழிபோடும் ஜிப்ரான்
சாய் தரம் தேஜ்
ரெஜினாவுடன் காதலா என்று கேட்டதற்கு சாய் தரம் தேஜ் இல்லை என்கிறார். நானும், ரெஜினாவும் நல்ல நண்பர்கள் மட்டுமே, வேறு ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார் அவர்.
நண்பர்கள்
திரையுலகை சேர்ந்த ஆணும், பெண்ணும் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று கூறினால் அது காதல் என்று தான் அர்த்தம். அப்படி கூறிய பலர் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று விபரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.
பாபு காரு
சாய் தரம் தேஜ் ரெஜினாவை செல்லமாக பாப்பா என்று அழைப்பாராம். பதிலுக்கு ரெஜினா அவரை பாபு காரு என்று கூப்பிடுவாராம். தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த ரெஜினா தற்போது கோலிவுட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்.
சர்ச்சை
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ஏக் லட்கி கோ தேக்கா தோ ஐசா லகா படம் மூலம் பாலிவுட் பக்கம் சென்ற ரெஜினா ஓரினச்சேர்க்கையாளராக நடித்தார். முதல் இந்தி படத்திலேயே தைரியமாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அவர்.