Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சித்ரா கிட்ட அதை பண்ண சொன்னேன் அவ கேட்கல.. அவ தற்கொலை பண்ணிக்கல கொலை தான்.. ரேகா நாயர் பகீர்!
சென்னை: ஹேமந்த்தை யூஸ் பண்ணிட்டு விட்ற சொன்னேன். ஆனால், சித்ரா அதை கேட்கல என பகீர் கிளப்பி உள்ளார் நடிகை ரேகா நாயர்.
சின்னத்திரை நடிகை விஜே சித்ராவின் ஹேண்ட்பேக்கில் கஞ்சா, சிகரெட் உள்ளிட்டவை இருக்கும் என்றும், அவளுக்கு பலருடன் தொடர்பு இருந்தது என்றும் வெளிப்படையாக பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார் நடிகை ரேகா நாயர்.
மேலும், சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் கொலை தான் செய்யப்பட்டுள்ளார் என்றும் பேசி அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
விஜே சித்ரா மரண வழக்கு மீண்டும் உயிர் பெறுகிறதா? அரசியல் பின்புலம் உள்ளதா? ஹேம்நாத் புகார் ஏன்?
விஜே சித்ரா மரணம்
கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி விஜே சித்ரா தூக்கிட்ட நிலையில், போலீசாரால் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்ட நிலையில், சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடன் நடித்த பலரும் சந்தேகத்தை கிளப்பினர். சம்பவம் நடந்த அன்று நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் சித்ரா மற்றும் ஹேமந்த் தனியாக ரூம் எடுத்து தங்கி இருந்தனர்.
ரேகா நாயர்
சித்ராவின் நெருங்கிய தோழியும் நடிகையுமான ரேகா நாயருக்கும் ஹேமந்துக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து பேசி வருகிறார் ரேகா நாயர். சமீபத்தில் டிவி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி பரபரப்பை கிளப்பி உள்ளது.
ஹேமந்த் கொல்லல
விஜே சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவரது மரணம் கொலை தான் என அதிர்ச்சிகரமான தகவல்களை அம்பலப்படுத்தினார் ரேகா நாயர். ஆனால், விஜே சித்ராவை ஹேமந்த் கொலை செய்யவில்லை என்றும் உறுதியாக கூறுகிறார். மேலும், சித்ராவை யார் கொலை செய்தது என்பது ஹேமந்துக்கு நல்லாவே தெரியும் என்றும் மாஜி அமைச்சருக்கு இதில் தொடர்பில்லை என்றும் பேசியுள்ளார்.
சித்ரா கேட்கல
பல பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களை கழட்டி விடுவது தான் ஹேமந்தின் வேலை என்றும் அவனை யூஸ் பண்ணிக்கிட்டு கழட்டி விட்டுடு என சொன்னேன். ஆனால், அவள் கேட்கவில்லை. அவசர அவசரமா ரெஜிஸ்டர் மேரேஜ்லாம் பண்ணிட்டு கடைசியில இப்படி ஆகிடுச்சு என்றார்.
பார்ட்டி பப்புதான்
வாரத்தில் பல நாட்கள் பார்ட்டி பப் என்று தான் விஜே சித்ராவும் ஹேமந்தும் சுற்றி வந்தனர். அவளுக்கு பல அரசியல் பிரபலங்கள் மற்றும் நடிகர்களுடன் தொடர்பு இருந்தது உண்மை தான். மேலும், ஹேமந்த் விஜே சித்ராவை பல வகையில் யூஸ் செய்து விட்டு இப்படியொரு நிலைக்கு தள்ளி விட்டான் என கடுமையாகவே சீறியுள்ளார் ரேகா நாயர். விஜே சித்ரா மரணத்தில் தொடர்புடையவர்கள் பற்றிய ஆதாரங்கள் ரேகா நாயரிடம் வலுவாக இருப்பதால் தான் அவர் தொடர்ந்து இந்த பிரச்சனையில் தலையிட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!