ஐஸ்வர்யா ராய் வீட்டில் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய சீனியர் நடிகை?
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகை ரேகா ஐஸ்வர்யா ராய்க்கு எழுதிய கடிதம் பற்றி தான் இந்தி திரையுலக பிரபலங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும் அவரது மாமியாரும், நடிகையுமான ஜெயா பச்சனுக்கும் இடையே பிரச்சனை என்று பலகாலமாக பேசப்படுகிறது.
மகள் ஆராத்யாவை கூட மாமியார் பக்கமே செல்லவிடமாட்டாராம் ஐஸ்வர்யா.

கடிதம்
ஐஸ்வர்யா ராயை புகழ்ந்து தள்ளி பாலிவுட் நடிகை ரேகா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆஷுக்கு ரேகா மா எழுதும் கடிதம் என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.

ஜெயா பச்சன்
ரேகா கடிதம் எழுதியதில் என்ன தவறு என்று கேட்கலாம். அவர் கடிதம் எழுதியதில் ஒரு தவறும் இல்லை. ஜெயா பச்சனுக்கு ரேகாவை சுத்தமாக பிடிக்காது என்பது பாலிவுட்டுக்கே தெரியும்.( அது பெரிய பழைய கதை)

கோபம்
தனக்கு ஆகாத ரேகாவுடன் ஐஸ்வர்யா ராய் நெருங்கிப் பழகி வருவது ஜெயா பச்சனுக்கு பிடிக்கவில்லையாம். இந்நிலையில் ரேகா கடிதம் எழுதியுள்ளது எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியுள்ளது.

ஆசி
ஐஸ்வர்யா பொது நிகழ்ச்சிகளில் ரேகாவை பார்த்தால் அம்மா என்று அன்பாக அழைத்து ஆசி பெறுவார். மாமியாருக்கு ரேகாவை பிடிக்காது என்று தெரிந்தும் ஐஸ் அவருடன் ஒட்டி உறவாடி வருகிறார்.

பேச்சு
நடிகை ஷம்மி இறுதிச் சடங்கில் தான் மாமியாரும், மருமகளும் பாசமாக இருந்தார்கள். அதற்குள் கடிதம் வடிவில் குண்டு வந்து விழுந்துவிட்டதே என்கிறார்கள் பாலிவுட்காரர்கள்.


Click it and Unblock the Notifications











