Don't Miss!
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பிரமாண்ட இசை விழாவில் 100 நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதியுதவி!
சிவா மனசில புஷ்பா... விரைவில் வரவிருக்கும் அரசியல் பரபரப்பு படம் இது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் புதன் கிழமை சென்னையில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட தமிழ் திரையுலகின் அத்தனை முன்னணி பிரபலங்களையும் பங்கேற்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் படத்தின் இயக்குநர் - ஹீரோ - தயாரிப்பாளர் வாராகி.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம், நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 100 நலிந்த கலைஞர்களுக்கு அந்த மேடையிலேயே கணிசமான நிதி உதவி வழங்குவதுதான். பெரிய தயாரிப்பாளர்கள், பெரிய பேனர் படங்களின் நிகழ்ச்சிகளில் கூட செய்யாத மிகப் பெரிய நிதி உதவி இது. தொகை எவ்வளவு என்பதை ஒரு சஸ்பென்சாக வைத்திருக்கிறார் வாராகி.
நிதி உதவியுடன் அவர்கள் அனைவருக்கும் பிரமாதமான அசைவ விருந்து அளிக்கவும் தயாரிப்பாளர் வாராகி திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.
பிப்ரவரி 7-ம் தேதி புதன்கிழமை மாலை பிரசாத் லேப் திரையரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜேகே ரித்தீஷ் இந்த நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராகப் பங்கேற்று நிதி உதவியை வழங்குகிறார்.