Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தனுஷ், யுவன் குரல்களில் ரெண்டு ராஜா… அதிரிபுதிரியாக வெளியானது நானே வருவேன் செகண்ட் சிங்கிள்
சென்னை: தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் வரும் 29ம் தேதி வெளியாகிறது.
செல்வராகவன் இயக்கியுள்ள நானே வருவேன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், நானே வருவேன் படத்தில் இருந்து இரண்டாவது பாடலான 'ரெண்டு ராஜா' தற்போது வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் பார்த்துட்டு OTTயில் படங்கள் பார்க்கிறதையே நிறுத்திட்டேன்.. ஏ.ஆர். ரஹ்மான் பளிச்!
மீண்டும் இணைந்த மூவர் கூட்டணி
காதல் கொண்டேன், புதுப்பேட்டை என இரண்டு தரமான படங்களைக் கொடுத்த தனுஷ், செல்வராகவன், யுவன் கூட்டணி, தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இக்கூட்டணியில் உருவாகியுள்ள 'நானே வருவேன்' திரைப்படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், சைக்கோ க்ரைம் திரில்லர் பின்னணியில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனை ஏற்கனவே வெளியான டீசரும் உறுதி செய்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக 29ம் தேதி நானே வருவேன் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
தொடரும் யுவனின் மேஜிக்
செல்வராகவன் - யுவன் காம்போ என்றாலும், தனுஷ் - யுவன் ஆனாலும் சரி, அண்ணன், தம்பியான செல்வராகவன், தனுஷ் இருவரையுமே விட்டுக் கொடுத்ததில்லை யுவன். செல்வராகவனின் படங்களுக்கு பெரிய பலமாக யுவன் தொடர்ந்து பயணித்து வருகிறார். அதேபோல் தனுஷுக்கும் தரமான ஹிட் பாடல்களைக் கொடுத்து சப்போர்ட்டாக இருக்கிறார் யுவன். இந்நிலையில், மூன்றாவது முறையாக தனுஷ் - யுவன் - செல்வராகவன் கூட்டணியில் வெளிவரவிருக்கும் நானே வருவேன் படத்திலும் இசை கவனிக்க வைத்துள்ளது.
வெளியானது ரெண்டு ராஜா பாடல்
நானே வருவேன் படத்தில் இருந்து ஏற்கனவே 'வீரா சூரா' என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை ரணகளப்படுத்தியிருந்தது. யுவனின் இசையில் தெறி மாஸாக வெளியான இந்தப் பாடலுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து வெளியான நானே வருவேன் டீசரில் பின்னணி இசையில் மிரட்டியிருந்தார் யுவன். இந்நிலையில், தற்போது செகண்ட் சிங்கிள் டிராக்கான 'ரெண்டு ராஜா' பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை தனுஷே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
யுவன், தனுஷ் குரல்களில் வேற லெவல்
மிக முக்கியமாக 'நானே வருவேன்' படத்தில் இருந்து வெளியான 'ரெண்டு ராஜா' பாடலை, தனுஷும் யுவனும் இணைந்து பாடியுள்ளனர். இருவரது வாய்ஸிலும் செம்ம தாறுமாறாக உருவாகியுள்ள ரெண்டு ராஜா பாடல் ரசிகர்களை கலங்கடித்து வருகிறது. நானே வருவேஎன் படத்தின் கதையை சொல்லும் விதமாக இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. அதேபோல், 'அரக்கன் ஒருவன் இல்லையென்றால் இறைவன் மகிமை புரியாது" போன்ற வரிகள் கவனம் ஈர்த்துள்ளது. இதனால், ஒரு தனுஷ் ஹீரோவாகவும், இன்னொருவர் வில்லனாகவும் நடித்துள்ள கன்ஃபார்ம் ஆகியுள்ளது. தனுஷ், யுவன் காம்போவில் வெளியான இந்தப் பாடல், இருவரது ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது