twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொலை மிரட்டல் விடுத்த ரசிகர்கள்: ட்விட்டரில் இருந்து வெளியேறிய நடிகை

    By Siva
    |

    Recommended Video

    பவன் கல்யாண் ரசிகர்கள் கொலை மிரட்டலால் ரேணு தேசாய் ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.

    ஹைதராபாத்: பவன் கல்யாண் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து நடிகை ரேணு தேசாய் ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.

    தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய்க்கும், தொழில் அதிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்த புகைப்படங்களை ரேணு சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

    அதை பார்த்த பவன் கல்யாண் ரசிகர்கள் அவரை மிரட்டினார்கள்.

    மிரட்டல்

    மிரட்டல்

    ஏன் உங்களால் தனியாக வாழ முடியாதா, எத்தனை பெண்கள் சிங்கிளாக உள்ளனர். இரண்டாவது திருமணம் செய்தால் கொன்றுவிடுவோம் என்று பவன் கல்யாண் ரசிகர்கள் ரேணு தேசாயை மிரட்டியுள்ளனர்.

    ரேணு

    ரேணு

    பவன் கல்யாண் ரசிகர்கள் அசிங்கமாக திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததை பார்த்த ரேணு தேசாய் ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளார். நெகட்டிவிட்டி வேண்டாம் என்று ட்விட்டரில் இருந்து வெளியேறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    வாழ்க்கை

    வாழ்க்கை

    வாழ்க்கையில் புது அத்தியாயத்தை துவங்கும் நான், நெகட்டிவிட்டியில் இருந்து தள்ளியிருக்க ட்விட்டரில் இருந்து வெளியேறுகிறேன். வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார் ரேணு தேசாய்.

    வாழ்த்து

    ரசிகர்கள் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் பவன் கல்யாணோ ரேணு சேசாய்க்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட்டியுள்ளார்.

    கோரிக்கை

    கோரிக்கை

    நீங்கள் வாழ்த்துகிறீர்கள் ஆனால் உங்களின் ரசிகர்களோ ரேணுவை மிரட்டுகிறார்கள். அவர்களை கொஞ்சம் அடக்கி வைக்கக் கூடாதா என்று பலரும் பவன் கல்யாணிடம் சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    Renu Desai has deactivated her twitter account after her former husband Pawan Kalyan's fans threatened to kill her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X