Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நான் விமர்சகர்களுக்காக படம் பண்ணுவதில்லை. ரசிகர்களுக்காக மட்டுமே... "கெத்து" காட்டும் உதயநிதி
சென்னை: நான் விமர்சகர்களுக்காக படம் பண்ணுவதில்லை. ரசிகர்களுக்காக மட்டுமே என தனது படம் குறித்து எதிர்மறையாக விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் கெத்து. இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த வாரம் வியாழக்கிழமை ரிலீஸ் ஆனது.
இப்படத்தில் உதயநிதியின் ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.
எதிர்மறையான விமர்சனம்...
இந்நிலையில், கெத்து படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமாக பதில் அளித்துள்ளார் உதயநிதி.
ரசிகர்களுக்காக...
அதில் அவர், ‘நான் விமர்சகர்களுக்காக படம் பண்ணுவதில்லை. ரசிகர்களுக்காக மட்டுமே. ஆதரவுக்கு நன்றி.
நன்றி...
விமர்சகர்களுக்கு இதுதான் பதில். குடும்பமாக வருகை தந்துள்ள பார்வையாளர்களுக்கு நன்றி.
பொதுமக்களுக்காகவே...
பணம் பெற்றுக்கொண்டு விமர்சனம் செய்பவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் பொதுமக்களுக்காகவே படம் பண்ணுகிறேன்.
ஓகே... ஓகே...
ஒரு கல் ஒரு கண்ணாடி படம் வெளியானபோது ஒரு சினிமா விமர்சகர் அதை தனது விமர்சனத்தில் கிழித்தார். ஆனால் படம் பிறகு வெற்றி பெற்ற பிறகு அவர் தனது விமர்சனத்தை நீக்கிவிட்டார்.
டுபாக்கூர் விமர்சகர்களுக்கு...
இந்தப் புகைப்படம், பணம் வாங்கிக்கொண்டு விமர்சனம் எழுதுபவர்களைப் பற்றி எடுத்துரைக்கும். படத்தில் வருகிற ‘பார்' சண்டைக்காட்சியின் முதல் குத்து, பணம் வாங்கிக்கொண்டு விமர்சனம் எழுதும் டுபாக்கூர் விமர்சகர்களுக்கு' என இவ்வாறு அதில் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதுவே சாட்சி...
இது தவிர கெத்து படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் பார்க்கிங்கில் வாகனங்கள் அதிகளவு நிறுத்தப்பட்டுள்ள புகைப்படங்களையும், குடும்பத்தோடு மக்கள் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.