சம்பள பாக்கி கேட்டதால் கேவலமாகப் பேசினார் - தயாரிப்பாளர் மீது நடிகை ரேஷ்மி புகார்!

By Shankar

Reshmi
சம்பள பாக்கியைக் கேட்ட போது, கேவலமாகப் பேசியதாக தயாரிப்பாளர் மீது புகார் கூறியுள்ளார் நடிகை ரேஷ்மி.

தமிழில் தேனீர் விடுதி படத்தில் நடித்துள்ளார் ரேஷ்மி. கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஸ்வராஞ்சலி என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சம்பள பாக்கி வைத்துவிட்டாராம். இதைக் கேட்டதற்கு தாறுமாறாக பேசிவிட்டாராம் ஸ்ரீனிவாஸ்.

இதுகுறித்து ரேஷ்மி கூறுகையில், "கன்னடத்தில் ஸ்வராஞ்சலி படத்தில் நடிக்க தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் என்னை அணுகினார். ரூ.4 லட்சம் சம்பளம் தருவதாக கூறினார். படப்பிடிப்பு முடிந்து விட்டது. எனக்கு பேசிய சம்பளத்தை முழுவதும் தரவில்லை. பாக்கி வைத்துவிட்டார்.

அந்த பணத்தை கேட்டபோது என்னை ரொம்ப கேவலமாக பேசிவிட்டார். பணத்தையும் தர மறுக்கிறார். அவர் மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளேன்," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X