Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
புருவ அழகிக்கு நேரும் பரிதாபம்.. மொபைல் போன்ல சிம் கார்டே இல்லையாம்!
Recommended Video
திருவனந்தபுரம் : மலையாளத்தில் 'ஒரு அடார் லவ்' படத்தில் இடம்பெற்ற 'மாணிக்ய மலராய பூவி' என்கிற ஒரு பாடலில், புருவம் உயர்த்தி, கண்களை சிமிட்டி உலக ரசிகர்களை ஈர்த்தவர் புருவ அழகி பிரியா வாரியர்.
கண் அசைப்பில் இளைஞர்களை மயக்கிப்போட்ட பிரியா வாரியர் ஓவர் நைட்டில் சென்சேஷன் ஆனார். இதைத் தொடர்ந்து இவரை பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சில மில்லியன்களைத் தொட்டது.
பிரியா வாரியர் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு அவரது தந்தை தடைவிதித்துள்ளாராம். பிரியாவின் கையில் தற்போது ஒரு செல்போன் இருந்தாலும் கூட, அதில் சிம் கார்டு இல்லாததால் யாருடனும் போனில் பேசவும் முடியாதாம்.
இந்தத் தகவலை பிரியாவின் தந்தையே தெரிவித்துள்ளார். தற்போது தனது அம்மாவின் செல்போனை பயன்படுத்தித்தான் தனது நண்பர்களிடம் பேசி வருகிறாராம் பிரியா. அதிலும் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டும் என்றால் கூட, எங்கே வைஃபை இணைப்பு கிடைக்கிறதோ அந்த இடத்தில் மட்டும் பயன்படுத்திக்கொள்ள அவரது தந்தை அனுமதித்துள்ளாராம்.
'ஒரு அடார் லவ்' படத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இன்ஸ்டாகிராமில் ஸ்பான்ஸர் போஸ்டுக்கு எட்டு லட்சம் வாங்குகிறாராம். ஆனால், மொபைல் போன் பயன்படுத்த முடியாத பரிதாப நிலை.