Don't Miss!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
25 ஆண்டுகளுக்கு பிறகு 90 களின் டாப் ஹீரோக்களை ஒன்று சேர்க்கும் வெங்கட் பிரபு
சென்னை : கோலிவுட்டில் கமர்ஷியல் ஹிட் கொடுக்கும் டாப் டைரக்டர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு. சிவகாசி, ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய ரோல்களில் நடித்த வெங்கட் பிரபு, சென்னை 28 படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.
ஏரியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் படமான சென்னை 28 மிகப் பெரிய வெற்றிபடமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து சரோஜா, பிரியாணி, மங்காத்தா, சென்னை 28 இரண்டாம் பாகம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கினார்.
சமீபத்தில் தான் சிம்பு நடித்த மாநாடு படத்தை இயக்கி முடித்தார். மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் மாநாடு, விரைவில் ரிலீசாக உள்ளது. அரசியல், த்ரில்லர் கலந்த சையின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகி இருக்கம் மாநாடு படத்தில் கல்யாணி பிரியதர்ஷினி, பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மாநாடு படத்துடன் சேர்த்து லைவ் டெலிகாஸ்ட் வெப் சீரிஸ், கன்னட ஹீரோ கிச்சா சுதீப்பை வைத்து கசடதபற ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். வெங்கட் பிரபுவின் முதல் வெப்சீரிசான லைவ் டெலிகாஸ்ட் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. கசடதபற படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் அடுத்த படத்தின் வேலைகளையும் வெங்கட் பிரபு துவக்கி உள்ளாராம். மல்டி ஸ்டார் படமான இதில் அரவிந்த் சாமி, பிரபு தேவா ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடிக்க போகிறார்களாம். இந்த பிரம்மாண்ட படத்தை வெங்கட் பிரபுவின் நெருங்கிய நண்பரும் நடிகருமான நிதின் சத்யா தயாரிக்க போகிறாராம்.
பிரபு தேவாவும், அரவிந்த் சாமியும் இணைந்து 1997 ல் வெளியான மின்சார கனவு படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஏவிஎம் தயாரித்த இந்த படத்தை ராஜீவ் மேனன் இயக்கி இருந்தார். வழக்கமான முக்கோண காதல் கதை என்றாலும் வித்தியாசமாக, ஏ.ஆர்.ரஹ்மானின் அழகான இசையுடன் இந்த படம் அமைந்திருந்தது.
தற்போது கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு தேவா, அரவிந்த் சாமி இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்க உள்ளனர். விரைவில் இந்த படம் பற்றிய முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாம். 90 களின் டாப் ஹீரோக்களை மீண்டும் இணைத்து ஒரு படத்தை வெங்கட் பிரபு இயக்க போவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தளபதியின் தேவாவுக்கு 70 வயசு ஆகிடுச்சு.. தமிழ் சினிமாவில் கலக்கிய மம்மூட்டியின் டாப் 5 படங்கள்!