Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அந்த நடிகர் தன் மகளுக்காவது பாலியல் தொல்லை கொடுக்காமல் இருப்பாரா?: விளாசிய நடிகை
திருவனந்தபுரம்: பிரபல நடிகர் சித்திக் மீது நடிகை ரேவதி சம்பத் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்ததை அடுத்து பல நடிகைகள் மீ டூ என்று கூறி வருகிறார்கள். தற்போது அந்த பட்டியலில் மலையாள நடிகை ரேவதி சம்பத் சேர்ந்துள்ளார்.
அவர் பிரபல மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டு சித்திக் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக ரேவதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
21 வயதில் நடந்த அந்த சம்பவத்தின் பாதிப்பு தனக்கு இன்னும் நினைவில் உள்ளது என்று தெரிவித்த ரேவதி, சித்திக்கிடம் அவரின் மகள் பாதுகாப்பாக தான் உள்ளாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காசு கொடுத்துவிட்டு தான் இளையராஜா பாடல்களை பயன்படுத்தினோம்: 96 படக்குழு
எனக்கு நடந்தது போன்று உங்களின் மகளுக்கு நடந்தால் என்ன செய்வீர்கள் சித்திக் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மலையாள திரையுலகில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட டபுள்யூசிசி அமைப்பை சித்திக் விமர்சித்த வீடியோவையும் ரேவதி வெளியிட்டுள்ளார்.
ரேவதியின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்களோ அவர் விளம்பரம் தேட இப்படி கீழ்த்தரமாக சித்திக் மீது புகார் தெரிவிப்பதாக விளாசியுள்ளனர். மீ டூ என்று சொல்லும் பெண்கள் அதிகம் விளாசப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.