Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'மெரினா புரட்சி' ... மீண்டும் தடை விதித்தது மத்திய திரைப்பட தணிக்கைக் குழு!
மெரினா புரட்சி படத்துக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் மெரினா புரட்சி படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது.
2017ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாகக் கொண்டு எம்.எஸ்.ராஜ், 'மெரினா புரட்சி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் போராட்டக்களத்தில் எடுக்கப்பட்ட நிஜக் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர், எவ்வித காரணமும் சொல்லாமல், மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் பார்வைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடிகை கவுதமி தலைமையிலான குழுவினர் இப்படத்தை பார்த்தனர். ஆனால், அவர்களும் எவ்வித காரணமும் சொல்லாமல், படத்திற்கு மீண்டும் தடை விதித்துள்ளனர்.
இந்தியன் சினிமோடோகிராப் சட்டம் 1983 (Indian Cinematograph Act 1983) விதியின்படி ரிவைசிங் கமிட்டி மறுப்பு தெரிவித்தால் எப்சிஏடி (FCAT) எனப்படும் டெல்லி டிரிப்யூனல் சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை. ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு செகண்ட் ரிவைசிங் கமிட்டிக்கு படம் அனுப்பப்பட்டிருக்கிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மெரினா புரட்சி படக்குழு, 'காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம் தான் இந்த தடைக்கு காரணமாக இருக்குமோ எனும் ஐயம் எழுகிறது.
தமிழர்களின் பெருமை மிகு அடையாளமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை உரத்த குரலில் சொல்லும் மெரினா புரட்சி படத்தை முடக்கும் அனைத்து சதிகளையும் முறியடிக்க நாச்சியாள் பிலிம்ஸ் குழுவினர் உறுதியுடன் இருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளனர்.