Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'மெரினா புரட்சி' ... மீண்டும் தடை விதித்தது மத்திய திரைப்பட தணிக்கைக் குழு!
மெரினா புரட்சி படத்துக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் மெரினா புரட்சி படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது.
2017ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாகக் கொண்டு எம்.எஸ்.ராஜ், 'மெரினா புரட்சி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் போராட்டக்களத்தில் எடுக்கப்பட்ட நிஜக் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர், எவ்வித காரணமும் சொல்லாமல், மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் பார்வைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடிகை கவுதமி தலைமையிலான குழுவினர் இப்படத்தை பார்த்தனர். ஆனால், அவர்களும் எவ்வித காரணமும் சொல்லாமல், படத்திற்கு மீண்டும் தடை விதித்துள்ளனர்.
இந்தியன் சினிமோடோகிராப் சட்டம் 1983 (Indian Cinematograph Act 1983) விதியின்படி ரிவைசிங் கமிட்டி மறுப்பு தெரிவித்தால் எப்சிஏடி (FCAT) எனப்படும் டெல்லி டிரிப்யூனல் சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை. ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு செகண்ட் ரிவைசிங் கமிட்டிக்கு படம் அனுப்பப்பட்டிருக்கிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மெரினா புரட்சி படக்குழு, 'காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம் தான் இந்த தடைக்கு காரணமாக இருக்குமோ எனும் ஐயம் எழுகிறது.
தமிழர்களின் பெருமை மிகு அடையாளமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை உரத்த குரலில் சொல்லும் மெரினா புரட்சி படத்தை முடக்கும் அனைத்து சதிகளையும் முறியடிக்க நாச்சியாள் பிலிம்ஸ் குழுவினர் உறுதியுடன் இருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளனர்.