Don't Miss!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- News பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. மோடி எடுத்த இறுதி அஸ்திரம்.. புட்டு புட்டு வச்சிட்டாரே.. போச்சு
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கே. பாலச்சந்தர்.. தப்பாக ட்வீட் செய்து மன்னிப்பு கேட்ட ராம் கோபால் வர்மா
ஹைதராபாத்: இயக்குனர் கே. பாலச்சந்தர் இறந்துவிட்டார் என்று தவறாக ட்வீட் செய்ததற்காக இயக்குனர் ராம் கோபால் வர்மா மன்னிப்பு கேட்டுள்ளார்.
இயக்குனர் கே. பாலச்சந்தர் உடல்நலக்குறைவு காரணமாக திங்கட்கிழமை சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் அவர் நலமாக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறுகையில்,
இந்திய சினிமாவின் அருமையான இயக்குனர் கே. பாலச்சந்தரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
அதன் பிறகு பாலச்சந்தர் உயிருடன் இருக்கும் செய்தியை அறிந்த அவர் அந்த ட்வீட்டை அவசரமாக அழித்துவிட்டு புதிதாக ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.
அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,
பாலச்சந்தர் இறந்துவிட்டார் என்ற வதந்தியை நம்பி ட்வீட் செய்ததற்காக என்னை மன்னித்து விடுங்கள். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.