Don't Miss!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- News இப்போ தும்முனா சரியா இருக்கும்..! எடப்பாடியா? திமுகவா? ஓபிஎஸ் டீமிலிருந்து எஸ்கேப்பாகும் புகழேந்தி?
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வீரப்பன் பாத்திரத்துக்கு 'கோமாளி' போல ஒரு நடிகரைப் பிடித்த ராம்கோபால் வர்மா!
கில்லிங் வீரப்பன் படத்தில், சந்தனக் காட்டு வீரப்பனை மிகக் கேவலமாகச் சித்தரிப்பது என முடிவு செய்துவிட்ட ராம் கோபால் வர்மா, அந்தப் பாத்திரத்துக்கு கோமாளி மாதிரி ஒரு நாடக நடிகரை தேர்வு செய்துள்ளார்.
சந்தனக் காட்டு வீரப்பன் வாழ்க்கை ஏற்கெனவே பல முறை படமாக்கப்பட்டுவிட்டது. இப்போது கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் ராம் கோபால் வர்மா.
காட்டு பங்களாவில் இருந்த ராஜ்குமாரை வீரப்பன் துப்பாக்கிமுனையில் கடத்தியது. அவரை மீட்க அரசு அடுத்த நடவடிக்கைகள் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை. இறுதியில் வீரப்பன் என் கவுண்டரில் கொல்லப்பட்டது போன்றவைதான் இந்தப் படத்தின் கரு.
இதில் வீரப்பனை மோசமானவனாக சித்தரிக்கும் வகையில் திரைக்கதையை உருவாக்கியுள்ளதாக ஏற்கெனவே தகவல் கசிந்துள்ளது. வீரப்பனை அவதூறாக காட்டினால் வழக்கு தொடர்வேன் என்று அவரது மனைவி முத்துலட்சுமி அறிவித்து உள்ளார். தமிழ் அமைப்புகளும் இந்தப் படத்துக்கு இப்போதே தடை கோர ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில் வீரப்பன் கேரக்டரில் நடிக்க சந்தீப் பரத்வாஜ் என்ற நாடக நடிகரை தேர்வு செய்துள்ளார் ராம்கோபால் வர்மா.
இவர் பார்க்க வீரப்பன் மாதிரி இல்லை என்பது ஒருபுறமிருக்க, ஒரு கோமாளியைப் போல உடல்மொழியுடன் காட்சி தருகிறார். வீரப்பனை முடிந்தவரை கேவலமாகக் காட்டுவது என முடிவெடுத்து ராம் கோபால் வர்மா இந்தப் படத்தை எடுக்கிறார் போலிருக்கிறது என மீடியாவில் விமர்சனம் எழ ஆரம்பித்துவிட்டது.