Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆமா, சென்னையில் மழையை நிறுத்த ரஜினி ஏன் எதுவுமே செய்யவில்லை: ராம் கோபால் வர்மா கிண்டல்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ரூ.5 முதல் 10 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ள சூப்பர் ஸ்டார்களை இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திரையுலக பிரபலங்கள் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.5 முதல் 10 லட்சம் நிதி அளித்துள்ள சூப்பர்ஸ்டார்களை கிண்டல் செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.10 லட்சம் அளித்துள்ளதை பலரும் ஒரு மாதிரியாக பார்க்கையில் ராம் கோபால் வர்மா இவ்வாறு கிண்டலடித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
சூப்பர் ஸ்டார்களே
ஓமைகாட்! சூப்பர் ஸ்டார்கள் அளித்துள்ள ரூ.5 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் என்ற பெரிய தொகையை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் சென்னை மக்கள் குழம்பியுள்ளனர். இதற்கு அவர்கள் நன்கொடை அளிக்காமலேயே இருக்கலாம்.
|
ரஜினிகாந்த்
மழையை நிறுத்த ரஜினிகாந்த் ஏன் எதுவும் செய்யவில்லை என்று நான் வியக்கிறேன்.
|
பணம்
பிரபலங்கள் குவின்டால் கணக்கில் பிரார்த்தனையையும், டன் கணக்கில் அன்பையும் கொஞ்சம் பணத்தையும் அளிக்கிறார்க்ள். ஏன் என்றால் பிரார்த்தனை மற்றும் அன்பு மலிவானது.
|
சுயநலவாதி
நான் ஒரு ரூபாய் கூட நன்கொடை அளித்தது இல்லை. குவின்டால் கணக்கில் பிரார்த்தனை மற்றும் டன் கணக்கில் அன்பை அளிக்கும் பிரபலங்களுக்கு மத்தியில் நான் மிகவும் சுயநலவாதி.