Don't Miss!
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
'தற்கொலை செய்துகொள்ளலாம் போல இருக்கிறது' - பிரபல இயக்குநர் உருக்கமான பதிவு
Recommended Video
சென்னை : ஶ்ரீதேவியின் மறைவுக்கு அவரோடு நடித்த நடிகர்கள், படம் இயக்கியவர்கள், அவரது படங்களில் பணிபுரிந்தவர்கள் எனப் பலரும் உருக்கமான அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
ஶ்ரீதேவியின் உடல் துபாயில் விசாரணை முடிந்து இன்னும் இந்தியாவுக்கு கொண்டுவரப்படவில்லை. இன்று மாலை கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஸ்ரீதேவி மரணம் பற்றி வெளிவரும் தகவல்களால் மனம் வருந்தி ட்விட்டரில் உருக்கமான ட்வீட் போட்டிருக்கிறார்.
ராம்கோபால் வர்மா
ஶ்ரீதேவின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்டதில் இருந்து அவருடனான தனது பயணம் குறித்து ட்விட் செய்து வருகிறார் ராம்கோபால் வர்மா. ராம்கோபால் வர்மாவுக்கு மிகவும் பிடித்த நடிகையாக விளங்கியவர் ஶ்ரீதேவி. அதனால், ஶ்ரீதேவியின் இறப்பை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
பகிரும் ராம்கோபால் வர்மா
ஶ்ரீதேவியின் மரண செய்தி வந்ததில் இருந்து இயக்குனர் ராம்கோபால் வர்மா ஸ்ரீதேவி பற்றிய சுவாரஸ்ய விஷயங்களையும், அவருடன் எடுத்த புகைப்படங்களையும் ட்விட்டரில் ஷேர் செய்து கொண்டிருந்தார்.
|
முன்பும் இப்போதும்
ஶ்ரீதேவி குறித்து அவரது உடல் அழகு, ஈர்க்கும் கண்கள், அவரது உதடுகள், அற்புதமான இடுப்பு மற்றும் தொடைகளைப் பற்றிப் பேசினார்கள். இப்போது அவரது மரண அவஸ்தை, ரத்தத்தில் மதுபானம், நுரையீரலில் தண்ணீர், அவரது வயிற்றில் என்ன இருக்கிறது எனப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
|
தற்கொலை செய்துகொள்ளலாம் போல
"மனிதர்களின் வாழ்க்கை இவ்வளவு சோகமாகவும் கொடூரமாகவுமா முடிவடையும்?" எனக் கேட்டுள்ளார். ஶ்ரீதேவியின் மரணம் குறித்து நிறைய பரபரப்பு தகவல்கள் வருவதால் அதையெல்லாம் கேட்கும்போது தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றுவதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.