இப்போகூட 'கட்சி' ஆரம்பிக்காட்டா பவர் ஸ்டார் ஒரு பெரிய முட்டாள்: ராம்கோபால் வர்மா

சர்ச்சையின் மற்றொரு பெயர் தான் இயக்குனர் ராம்கோபால் வர்மா என்று கூறும் அளவுக்கு அவர் உள்ளார். அவர் பேட்டிகளிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ எந்த கருத்தை தெரிவித்தாலும் அதனால் சர்ச்சை ஏற்படுகிறது.
இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மக்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதற்கான சான்றை பார்த்த பிறகும் கல்யாண் சொந்தமாக கட்சி துவங்கவில்லை என்றால் அவர் தான் மிகப்பெரிய முட்டாள். பவன் கல்யாண் இமய மலையின் உச்சியை அடைந்துவிட்டார். ஆனால் சிரஞ்சீவிகாரு 40 ஆண்டுகள் கழித்தும் மலையின் அடிவாரத்தில் தான் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய பவனின் அத்தாரின்டிகி தாரேதி படம் லேட்டாக தற்போது ரிலீஸானாலும் வசூலில் சக்கை போடு போடுகிறது.
Comments


Click it and Unblock the Notifications