Don't Miss!
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- News செம ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் சென்னையில் ஓட்டு போட குவிந்த மக்கள்.. வாக்கு சதவீதம் எகிறியது
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கைது செய்யப்பட்ட நடிகை ரியாவுக்கு கொரோனா டெஸ்ட்.. பரபரப்பாகச் சுத்தம் செய்யப்பட்ட சிறப்பு லாக்கப்!
மும்பை: போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியா சக்கரவர்த்திக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
Recommended Video
போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை ரியா சக்கரவர்த்தியின் சகோதரர் சோவிக், சாமுவேல் மிராண்டா உள்பட சிலர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இதையடுத்து நடிகை ரியா சக்கரவர்த்தியும் இன்று கைது செய்யப்பட்டார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அழகிய சிறுக்கி.. அருவா மூக்கி.. வாரி அணைக்கும் வைரமுத்துவின் வரிகளில்.. வைரலான ரணசிங்கம் சிங்கிள்!
ரியா சக்கரவர்த்தி
நடிகர் சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், நடிகை ரியா சக்கரவர்த்தி மீது பரபரப்பு புகார் அளித்தார்.
பணமோசடி
அதில், சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டினார் என்றும், பணமோசடி செய்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து பாட்னா போலீசார் நடிகை ரியா சக்கரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். நடிகை ரியா மீது கூறப்பட்ட பண மோசடி மற்றும் பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை, விசாரணை நடத்தியது.
வாட்ஸ்அப் உரையாடல்கள்
இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்த போது ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி தேசிய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் நடிகை ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சோவிக் சக்கரவர்த்தி
நடிகை ரியாவின் சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி, சுஷாந்த் வீட்டு மானேஜர் சாமுவேல் மிரண்டா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு இருவரையும் போதைப் பொருள் வழக்குக்காக கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். இந்நிலையில், நடிகை ரியா சக்கரவர்த்தியிடம் கடந்த சில நாட்களாக போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், விசாரணை நடத்தி வந்தனர். இன்று திடீரென கைது செய்தனர்.
கொரோனா பரிசோதனை
பின்னர் அவர் மும்பை சயான் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் சில சோதனைகளும் செய்யப்பட இருக்கிறது. 7.30 மணியளவில், வீடியோ கான்பரஸ் மூலம் மாஜிஸ்திரேட் முன் ரியா ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். இதற்கிடையே ரியா சக்கரவர்த்திக்காக, அவர் வைக்கப்பட இருக்கும் லாக்கப் சுத்தமாக்கப்பட்டுள்ளது.