Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு வைத்த சிஎஸ்கே வீரர்.. டி20 உலககோப்பையில் சேர்க்க ரெய்னா கோரிக்கை
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
என் மகனுக்கு விஷத்தை கொடுத்து கொன்றுவிட்டார்.. அவர்தான் கொலையாளி.. கதறும் சுஷாந்தின் தந்தை!
சென்னை: என் மகனுக்கு விஷம் கொடுத்து ரியா சக்ரவர்த்தி கொன்றுவிட்டார் என சுஷாந்தின் தந்தை கூறியுள்ளார்.
Recommended Video
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் நாள்தோறும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி, அவருக்கு தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுத்து வந்தது அவரது வாட்ஸ் அப் மெஸேஜ்கள் மூலம் தெரிய வந்தது.
கூடும் க்ரைம் ரேட்.. சுஷாந்தின் கிரெடிட் கார்டு பின் நம்பரை மாற்ற முயன்ற ரியா.. அம்பலமான அடுத்த சதி!
அம்பலமான சதி
30 நிமிடத்திற்கு ஒரு முறை என சுஷாந்துக்கு போதை மருந்துகளை கொடுத்து ரியா அவரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் அம்பலமானது. இதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை பயன்படுத்தியதாக போதை பொருள் தடுப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வழக்கறிஞர் குற்றச்சாட்டு
சுஷாந்துக்கு தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை அளவுக்கு அதிகமாக கொடுத்ததுதான் அவரது மரணத்திற்கு வழி வகுத்தது என்று சுஷாந்தின் வழக்கறிஞரான விகாஸ் சிங் நேற்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இது பெரிய குற்றம் என்றும் கூறியிருந்தார்.
கைது செய்ய வேண்டும்
இந்நிலையில் சுஷாந்தின் தந்தையான கேகே சிங் தனது மகனின் மரணம் குறித்து விசாரிக்கும் சிபிஐ, ரியா சக்ரவர்த்தியை "கைது செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில், நடிகை ரியா சக்ரவர்த்திதான் தனது மகனை தற்கொலைக்குத் தூண்டினார் என்றும் தனது மகனை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
விஷம் கொடுத்து கொலை
தற்போது ரியா சக்ரவர்த்திதான் தனது மகனை கொன்ற கொலைக்காரி என்று கூறியுள்ளார். ரியா சக்ரவர்த்தி நீண்ட காலமாக தனது மகன் சுஷாந்திற்கு விஷம் கொடுத்து, அவரை கொன்று விட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் விசாரண முகமை ரியா சக்ரவர்த்தியையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கஸ்டடியில் வைக்க வேண்டும்
மேலும் நடிகர் சுஷாந்தின் சகோதரியான ஸ்வேதா சிங் கீர்த்தியும் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது சகோதரரின் கொலை குற்றவாளிகள் உடனடியாக காவலில் வைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், ஏன் இத்தகைய கொடூரமான குற்றத்தைச் செய்தவர்கள்... எந்த தண்டனையும் இல்லாமல் நகர்கிறார்கள்??? எனக்கு ஒரு பதில் தேவை!! அவர்களை உடனடியாக காவலில் வைக்க வேண்டும்!! என தெரிவித்துள்ளார்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே