Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
கமலையே திக்குமுக்காட வைத்த ஷெரின்.. மனசே இல்லாமல் வெளியே வந்த ரியோ.. பங்கம் செய்த பிக்பாஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது நபராக வெளியேற்றப்பட்டார் ரியோ.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரியோ வந்த இரண்டாவது வாரத்திலேயே சவாலான போட்டியாளர் என கூறப்பட்டார். அந்த அளவுக்கு ஹவுஸ்மேட்டுகளை எண்டெர்டெயின் செய்து விளையாடினார்.
ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் அவருடைய ஒரிஜினாலிட்டி தெரிந்தது. குரூப்பிஸத்தில் சிக்கி அன்பு கேங்கில் அடைக்கலம் ஆனார்.
என்னா ஆக்ரோஷம்.. கவிதை சொன்ன கமல்.. சோம் தட்ட.. அண்ணாத்த ஆடுறார் பாட்டு பாடியும் அசத்தல்!
ரியோவை காணவில்லை
தான் தான் டைட்டில் வின்னர் என்ற கனவில் இருந்தார் ரியோ. கடந்த வாரம் உள்ளே சென்ற எவிக்ட்டான ஹவுஸ்மேட்ஸ், ஆரிதான் வின்னர் என்று சொல்லியும் ரியோவின் பெயர் டேமேஜ் ஆனதையும் கூறி அவரை ஒரு வழியாக்கிவிட்டனர். இதனால் பழைய ரியோவை கடந்த சில நாட்களாக காணவில்லை.
அழைத்து வந்த ஷெரின்
இந்நிலையில் பிக்பாஸ் ஃபினாலேவில் மூன்றாவது நபராக வெளியேற்றப்பட்டார். முதல் நபரான சோமை முகென் அழைத்து வந்த நிலையில் இரண்டாவது நபராக ரம்யாவை கவின் அழைத்து வந்தார். மூன்றாவது நபரான ரியோவை ஷெரின் அழைத்து வந்தார்.
ஆடிப்போன கமல்..
முன்னதாக மேடைக்கு வந்த ஷெரின், கமலிடம் உள்ளே போய் யாரை வேண்டுமானாலும் கூட்டிட்டு வரலாமா என்று கேட்டார். இதனால் ஒரு கணம் ஆடிப்போனார் கமல். அதெல்லாம் இல்லை, அவர்கள் சொல்லும் நபரை தான் அழைத்து வர வேண்டும் என்றனர்.
Recommended Video
பெட்டிகளில் வெயிட்டிங்
உள்ளே சாவியுடன் சென்ற ஷெரின், கார்டன் ஏரியாவில் இருந்த மூன்று பெட்டிகளை திறக்கும்படி கூறினார். இதில் மூன்று பேரும் தங்களின் பெட்டிகளை திறந்தனர். அதில் ஆரி மற்றும் பாலாஜியின் பெட்டிகளில் வெயிட்டிங் என இருந்தது. ரியோவின் பெட்டியில் எவிக்ட்டட் என்று இருந்தது.
மனசே இல்லாமல்
ஏற்கனவே சோகமே உருவாய் இருந்த ரியோவின் முகத்தில் கூடுதல் சோகம் தொற்றிக் கொண்டது. 100 நாட்களுக்கு மேலாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த ரியோ, ஒவ்வொரு இடமாய் சென்று அமர்ந்து பார்த்தார். மனசே இல்லாமல் வேதனையுடன் வெளியே வந்தார் ரியோ.
மிஸ் பண்ணீங்களா?
முன்னதாக பாலாஜிக்கு பல பல்புகளை கொடுத்தார் ஷெரின். பாலாஜி இல்லாததால் எங்களுக்கு அம்மி கல் கொடுக்கவில்லை என்று டேமேஜ் செய்தார். தொடர்ந்து பிக்பாஸிடம் பேசிய ஷெரின், நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் நீங்க என்னை மிஸ் பண்ணீங்களா என்று கேட்டார்.
என்னோட வந்துடுறீங்களா?
அதற்கு பதில் கூறிய பிக்பாஸ், அதை சொல்லித்தான் தெரியணுமா? நிச்சயமா நான் உங்களை மிஸ் பண்ணேன் என்றார் பிக்பாஸ். தொடர்ந்து பேசிய ஷெரின், நான் உங்களை கூட்டிட்டு போகலாமா? என்னோடு வந்துடுவீங்களா என்று கேட்டார். அதற்கு இதெல்லாம் பேராசை ஷெரீன் என்றார் பிக்பாஸ்.
சிரிப்பு பெருசா வருதே
மேலும் ரியோவையும், ஷெரினே உங்களை அழைத்து செல்ல போகப் போகிறார் சந்தோஷம்தானே என்றும் கேட்டார். அதற்கு ரியோ சிரித்ததும், இப்போ மட்டும் சிரிப்பு பெருசா வருதே என்று கேட்டு அவரையும் கலாய்த்து அனுப்பினார் பிக்பாஸ்.