Don't Miss!
- News அமேதி தொகுதியில் ராகுல் காந்தி "மைத்துனர்" ராபர்ட் வதேரா போட்டியா? காங்கிரஸ் போஸ்டர்களால் பரபரப்பு!
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பேக் டூ ஃபார்ம் போல.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட ரியோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ரியோ முதல் முறையாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
Recommended Video
விஜே, சின்னத்திரை நடிகர், ஹீரோ என பல முகங்களை கொண்டவர் ரியோ ராஜ்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் இரண்டாவது ரன்னர் அப் ஆகி மூன்றாவது இடத்தை பிடித்தார் ரியோ.
ஒப்புக்கொள்ளவில்லை
பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இல்லை இல்லை என்று கூறிவிட்டு முதல் ஆளாய் குரூப்பிஸத்துக்குள் நுழைந்தவர் ரியோதான். ஆனால் கடைசி வரை அதனை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
அன்பு கேங்கே கதி..
அர்ச்சனா வரும் வரை ஜாலியாக ஹவுஸ்மேட்ஸ்களையும் பார்வையாளர்களையும் எண்டெர்டய்ன் செய்து வந்த ரியோ, அர்ச்சனா வந்த பிறகு அன்பு கேங்கே கதி என்று இருந்தார். இதனால் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சனத்துக்குள்ளானார்.
கட்டிப்பிடித்த ரியோ
ரியோ நினைப்பது ஒன்று பேசுவது ஒன்று என்று இருந்ததாலும், பல விஷயங்களை புரியாமல் பேசியதாலும் அவரை கோமாளி என்றும் அழைத்தனர் நெட்டிசன்கள். அதோடு என்ன விஷயமாக இருந்தாலும் பெண் போட்டியாளர்களை கட்டிப்பிடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
கட்டிபிடி வைத்தியர்..
இதனால் குட்டி சினேகன், கட்டிப்பிடி வைத்தியர் என்றும் விமர்சிக்கப்பட்டார் ரியோ. இந்நிலையில் ஃபினாலே வாரத்தின் போது வீட்டுக்குள் வந்த போட்டியாளர்கள் ரியோ சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்படுவதை அவரிடம் தெரிவித்தனர்.
ரியோவின் பிளான்
மேலும் வெளியில் ஆரிக்கு இருந்த வரவேற்பையும் கூறினர். இதனால் நொந்து போன ரியோ அதன் பிறகு இருக்கும் இடம் தெரியாமலே இருந்தார். போதா குறைக்கு 10 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறலாம் என்று எண்ணியிருந்தார் ரியோ.
அப்செட் ஆனார் ரியோ
ஆனால் 5 லட்சம் ரூபாய் வந்ததுமே பெட்டியை எடுத்துக்கொண்டார் கேபி. அவரிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்தார் ரியோ. எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இதனால் ரொம்பவே அப்செட் ஆனார் ரியோ.
காணாமல் போன ரியோ
அதன் பிறகு சோகமே உருவாய் பிக்பாஸ் வீட்டுக்குள் சுற்றி வந்தார். சக ஹவுஸ் மேட்ஸ், கமல், பிக்பாஸ் என பலரும் ரியோவை காணவில்லை என்றே கூறினர். அந்த அளவுக்கு இருக்கும் இடம் தெரியாமல் போனார் ரியோ.
மகளுடன் கொஞ்சல்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்த ரியோவுக்கு குடும்பத்தினர் பட்டாசு வெடித்தும் மேளதாளங்கள் முழங்கவும் சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். 100 நாட்களுக்கு பிறகு பார்த்த தனது செல்ல மகளை கொஞ்சி மகிழ்ந்தார் ரியோ.
அழகான பயணமாக இருந்தது
அந்த வீடியோக்கள் வைரலான நிலையில், முதல் முறையாக மனம் திறந்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரியோ. அதில் அவர் பேசியிருப்பதாவது, எல்லோருக்கும் வணக்கம்! நான் இப்போது ரொம்ப நன்றாக இருக்கிறேன். பிக்பாஸ் சீசன் 4 எனக்கு ஒரு அழகான நல்ல பயணமாக இருந்தது.
நிறைய வேலை இருக்கிறது..
அதை நான் வெளியில் வந்து பார்த்த பிறகுதான் தெரிந்துகொண்டேன். நீங்கள் கொடுத்த ஆதரவு மற்றும் அன்பை வெளியில் வந்து பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் எனது நன்றி. இனிமேல் நிறைய வேலை இருக்கிறது.
பழைய ரியோவாக..
அதை எல்லாவற்றையும் பிளான் பண்ணி பண்ணலாம். இந்த அளவுக்கு எனக்கு பாசிட்டிவிட்டி கொடுத்த உங்கள் எல்லோருக்கும் ரொம்ப நன்றி' இவ்வாறு சிரித்த முகத்துடன் பழைய ரியோவாக பேசியுள்ளார். ரியோவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு