twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்னமும் திருந்தாத ரியோ.. ஆரி மீது அப்படியொரு கோபம்.. இவங்களாம் குரூப்பா பேசி திட்டமே போடலையாம்!

    |

    சென்னை: அர்ச்சனாவின் வெளியேற்றத்துக்கு பிறகாவது தனித்து விளையாட வேண்டும் என்பதை உணராமல், ரியோ குரூப்பாக ஆரியை தாக்கி பேசுவது ரசிகர்கள் மத்தியில் எரிச்சலை கிளப்பி உள்ளது.

    முடிவுக்கு வந்தது கொண்டாட்டம்.. பிக் பாஸ் டைட்டிலை ஆர்ப்பாட்டமாக வென்ற நடிகர்.. குவியும் வாழ்த்து!முடிவுக்கு வந்தது கொண்டாட்டம்.. பிக் பாஸ் டைட்டிலை ஆர்ப்பாட்டமாக வென்ற நடிகர்.. குவியும் வாழ்த்து!

    ஒவ்வொரு முறையும் ஆரிக்கு எதிராகவும் பாலாவுக்கு எதிராகவும் அர்ச்சனா ரியோவையும் சோமையும் ட்விஸ்ட் பண்ணி விட்டு வந்த நிலையில், அவருடைய திடீர் எவிக்‌ஷனும், நேர்மைன்னு சொல்றீங்க, நேர்மையா விளையாடுங்க என அர்ச்சனா கடைசியாக கொளுத்திப் போட்டதும் நல்லாவே வேலை செய்கிறது.

    ஆரிக்கு எதிராக

    ஆரிக்கு எதிராக

    அன்பு கோழி அர்ச்சனா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், ரியோ ரொம்பவே கடுப்பாகி உள்ளார். அர்ச்சனா எவிக்‌ஷனுக்கு முழுக்க முழுக்க ஆரி தான் காரணம் என்பது போல ரியோ பேசியது பிக் பாஸ் ரசிகர்களை ரொம்பவே எரிச்சல் அடைய செய்துள்ளது.

    குரூப்பாக கூடி

    குரூப்பாக கூடி

    6 பேர் கொண்ட பெரிய குரூப்பாக இருந்த அன்பு கேங் இப்போ மூன்று பேராக குறைந்தாலும், அவங்களோட குரூப்பாக கூடி பிளான் போடும் மன நிலை இன்னமும் மாறவில்லை. ரியோ நேத்து பேசிய பேச்சுக்கு இன்னைக்கும் ஆரி அதிகமாக நாமினேஷனில் வருவார் என்றே தெரிகிறது.

    இன்னும் திருந்தல

    இன்னும் திருந்தல

    அன்பு கேங் என்கிற பெயரில் குரூபிச விளையாட்டை விளையாடாதீங்க என்று எத்தனை முறை கமல் சொல்லியும் கேட்காத நிலையில், தொடர்ந்து 3 பேர் அந்த குரூப்பில் இருந்து அவுட் ஆகி உள்ளனர். இப்போதாவது ரியோ சுதாரிப்பார் என்று பார்த்தால், இன்னமும் திருந்தாமல் அர்ச்சனா வளர்த்து விட்ட கோழிக் குஞ்சாகவே இருக்கிறார்.

    சண்டை வெடிக்கும்

    சண்டை வெடிக்கும்

    ஆரிக்கு எதிராக சோமசேகரை திருப்பி விடவே நேற்று ரியோ அப்படி பேசினார் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர். ஆரி அமைதியாக நினைத்தாலும், ரியோ சும்மா இருக்க விடமாட்டார் என்றும், இந்த வாரம் நிச்சயம் ஆரிக்கு எதிராக அர்ச்சனா வெளியேறியதற்கு பழி வாங்க பயங்கர சண்டை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாலா மீதும்

    பாலா மீதும்

    நம்மள குரூப்பா விளையாடுறோம்னு சொன்னாங்க, பாலா அழகா ஷிவானியையும், ஆஜீத்தையும் காப்பாத்துறான் என பாலா மீதும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ரியோ. மேலும், அதை சோம் மற்றும் கேபியின் மூளைக்குள் செலுத்தி நல்லா பிரைன் வாஷ் செய்து விட்டார்.

    திறமையான போட்டியாளர்கள்

    திறமையான போட்டியாளர்கள்

    ரியோ, சோம் மற்றும் கேபி குரூப்பா உட்கார்ந்து அடுத்த வாரத்திற்கான திட்டத்தை தீட்டி வரும் நிலையில், புதுசா கேப்டனான பாலா, ஷிவானி மற்றும் ஆஜீத்துடன் தலையணையை வைத்து அடித்து விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்தும் பொறுக்க முடியாத ரியோ, அவங்களாம் தான் திறமையான போட்டியாளர்கள் என செம காண்டில் பேசியுள்ளார்.

    Recommended Video

    Yashika opens on her relationship with Bigg Boss Balaji Murugadoss

    English summary
    Rio Raj again carry his groupism and blaming Aari and Bala for Archana’s eviction. He clearly brainwashed Somashekar and Gabriella.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X