Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இன்னமும் திருந்தாத ரியோ.. ஆரி மீது அப்படியொரு கோபம்.. இவங்களாம் குரூப்பா பேசி திட்டமே போடலையாம்!
சென்னை: அர்ச்சனாவின் வெளியேற்றத்துக்கு பிறகாவது தனித்து விளையாட வேண்டும் என்பதை உணராமல், ரியோ குரூப்பாக ஆரியை தாக்கி பேசுவது ரசிகர்கள் மத்தியில் எரிச்சலை கிளப்பி உள்ளது.
முடிவுக்கு வந்தது கொண்டாட்டம்.. பிக் பாஸ் டைட்டிலை ஆர்ப்பாட்டமாக வென்ற நடிகர்.. குவியும் வாழ்த்து!
ஒவ்வொரு முறையும் ஆரிக்கு எதிராகவும் பாலாவுக்கு எதிராகவும் அர்ச்சனா ரியோவையும் சோமையும் ட்விஸ்ட் பண்ணி விட்டு வந்த நிலையில், அவருடைய திடீர் எவிக்ஷனும், நேர்மைன்னு சொல்றீங்க, நேர்மையா விளையாடுங்க என அர்ச்சனா கடைசியாக கொளுத்திப் போட்டதும் நல்லாவே வேலை செய்கிறது.
ஆரிக்கு எதிராக
அன்பு கோழி அர்ச்சனா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், ரியோ ரொம்பவே கடுப்பாகி உள்ளார். அர்ச்சனா எவிக்ஷனுக்கு முழுக்க முழுக்க ஆரி தான் காரணம் என்பது போல ரியோ பேசியது பிக் பாஸ் ரசிகர்களை ரொம்பவே எரிச்சல் அடைய செய்துள்ளது.
குரூப்பாக கூடி
6 பேர் கொண்ட பெரிய குரூப்பாக இருந்த அன்பு கேங் இப்போ மூன்று பேராக குறைந்தாலும், அவங்களோட குரூப்பாக கூடி பிளான் போடும் மன நிலை இன்னமும் மாறவில்லை. ரியோ நேத்து பேசிய பேச்சுக்கு இன்னைக்கும் ஆரி அதிகமாக நாமினேஷனில் வருவார் என்றே தெரிகிறது.
இன்னும் திருந்தல
அன்பு கேங் என்கிற பெயரில் குரூபிச விளையாட்டை விளையாடாதீங்க என்று எத்தனை முறை கமல் சொல்லியும் கேட்காத நிலையில், தொடர்ந்து 3 பேர் அந்த குரூப்பில் இருந்து அவுட் ஆகி உள்ளனர். இப்போதாவது ரியோ சுதாரிப்பார் என்று பார்த்தால், இன்னமும் திருந்தாமல் அர்ச்சனா வளர்த்து விட்ட கோழிக் குஞ்சாகவே இருக்கிறார்.
சண்டை வெடிக்கும்
ஆரிக்கு எதிராக சோமசேகரை திருப்பி விடவே நேற்று ரியோ அப்படி பேசினார் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர். ஆரி அமைதியாக நினைத்தாலும், ரியோ சும்மா இருக்க விடமாட்டார் என்றும், இந்த வாரம் நிச்சயம் ஆரிக்கு எதிராக அர்ச்சனா வெளியேறியதற்கு பழி வாங்க பயங்கர சண்டை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலா மீதும்
நம்மள குரூப்பா விளையாடுறோம்னு சொன்னாங்க, பாலா அழகா ஷிவானியையும், ஆஜீத்தையும் காப்பாத்துறான் என பாலா மீதும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ரியோ. மேலும், அதை சோம் மற்றும் கேபியின் மூளைக்குள் செலுத்தி நல்லா பிரைன் வாஷ் செய்து விட்டார்.
திறமையான போட்டியாளர்கள்
ரியோ, சோம் மற்றும் கேபி குரூப்பா உட்கார்ந்து அடுத்த வாரத்திற்கான திட்டத்தை தீட்டி வரும் நிலையில், புதுசா கேப்டனான பாலா, ஷிவானி மற்றும் ஆஜீத்துடன் தலையணையை வைத்து அடித்து விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்தும் பொறுக்க முடியாத ரியோ, அவங்களாம் தான் திறமையான போட்டியாளர்கள் என செம காண்டில் பேசியுள்ளார்.
Recommended Video
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!