Just In
- 8 hrs ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 8 hrs ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 8 hrs ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- 9 hrs ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
Don't Miss!
- News
புதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகம்.. 125 உணவு வகைகளை சமைத்து அசரவைத்த மாமியார்.. வைரல் வீடியோ
- Automobiles
மூன்று புதிய நிறங்களில் விற்பனைக்கு அறிமுகமானது யமஹா ஆர்15 வி3 பைக்... அனைத்தும் உங்களை நிச்சயம் கவரும்!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குரூபிசம்னு சொன்னாலே ரியோவுக்கு ஏன் அவ்ளோ கோபம் வருது.. ஆரிக்கும் ரியோவுக்கும் தான் இனி போட்டி போல?
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோவில் ஆரிக்கும் ரியோவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ரியோவை ஹீரோவாக்கவும் ஆரியை வெளியேற்றவும் விஜய் டிவி முயற்சித்து வருவதாக பிக் பாஸ் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
போட்டி தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவி.. டி.ராஜேந்தர் ராஜினாமா.. விநியோகஸ்தர் சங்கத்தில் தொடர்கிறார்
இந்த வாரமும் ஆரியை போரிங் போட்டியாளராக மாற்ற ரியோ முயற்சிப்பது மூன்றாவது புரமோவில் தெரிகிறது.

தங்க பந்து
கடந்த வாரம் தங்க முட்டை டாஸ்க் ஓடிய நிலையில், இந்த வாரம் பந்து பிடிக்கும் டாஸ்க்கிலும் தங்க பந்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில் ரியோ முதலிடத்திற்காக பேசிய பேச்சில் காண்டான ரம்யா பாண்டியன், ஒட்டுமொத்த புள்ளிகளுக்கும் வேட்டு வைத்து விட்டார். அதே போல பாலாவுக்கு கேபி பூஜ்ஜியத்தை பரிசளித்தார்.

போரிங் பாலா
ஏற்கனவே ஒருமுறை சுசித்ராவுடன் சேர்த்து பாலாவை போரிங் போட்டியாளராக்கி கண்ணாடி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த வாரமும் அனிதா சம்பத், கேப்டனாக பாலா சரியாக செயல்படவில்லை என்றும் ஷிவானிக்கு மட்டும் ஃபேவர் பார்த்தார் என்பதை சொல்லி போரிங் போட்டியாளருக்கு நாமினேட் செய்துள்ளார்.

மீண்டும் ஆரி
இந்த வீட்டில் அதிகமுறை கண்ணாடி சிறைக்கு சென்றவர் என்கிற பட்டத்தை ஆரிக்கு ஹவுஸ்மேட்கள் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். இன்றைய நிகழ்ச்சியிலும் ஆரி தான் போரிங் என ரியோ சொன்ன நிலையில், அதனை எதிர்த்து ஆரியும் ரியோவும் செய்யும் வாக்குவாதத்தை மூன்றாவது புரமோவில் காட்டி உள்ளனர்.

குரூபிசம்னா கோபம் வந்துரும்
குரூபிசம் பண்ணக் கூடாது என ரூல் புக்கில் போட்டு இருக்கு என ஆரி சொன்னதும், கோபப்பட்ட ரியோ, குரூபிசம் பண்ணக் கூடாதுன்னு எங்க போட்டிருக்கு காட்டுங்கள் என்றார். மாறாக தான் குரூபிசம் பண்ணவில்லை என வாதிடவில்லை. கூட்டமாக விளையாடக் கூடாது என போட்டிருக்கு, அதுக்கு இங்கிலீஷ்ல குரூப்புன்னு தானே அர்த்தம் என்று ஆரி கேட்க அனல் பறக்கிறது.

ஆரியை வெளியேற்ற
ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களுக்கும் தொடர்ந்து ஆரி பிரச்சனையாகவே இருந்து வருகிறார். அவரை வெளியேற்றிவிட்டால் ஈஸியா டைட்டிலை தட்டிச் செல்லலாம் என மற்றவர்களும் பிளான் போட்டு வருகின்றனர். விஜய் டிவியும் தனது செல்லப் பிள்ளைகளில் ஒருவருக்கு டைட்டிலை தூக்கிக் கொடுக்க ஆரி இடையூறாக உள்ள நிலையில், இந்த வாரம் ஆரியை வில்லனாக காட்டி வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளன.