Don't Miss!
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
’மீசையை முறுக்கு’ நாயகி ஆத்மிகாவின் அப்பா மரணம்.. மீளாத் துயரில் நடிகை பதிவிட்ட உருக்கமான போஸ்ட்!
சென்னை: நடிகை ஆத்மிகாவின் அப்பா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்த மீசையை முறுக்கு படத்தில் நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆத்மிகா.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நரகாசூரன், காட்டேரி உள்ளிட்ட படங்கள், ஆத்மிகா நடிப்பில் இன்னும் வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் விழாவுக்கு புதிய உறுப்பினர்கள்.. பிரபல ஹீரோ ஹிர்த்திக் ரோஷன், நடிகை ஆலியாவுக்கு அழைப்பு!
ஆத்மிகா அப்பா மரணம்
மாரடைப்பு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 26ம் தேதி நடிகை ஆத்மிகாவின் அப்பா பானு சந்திரன் உயிரிழந்துள்ளார். தந்தையின் இழப்பால், மனம் வாடி இருந்த நடிகை ஆத்மிகா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'மிஸ் யூ பா' என தந்தையின் கரங்களில் குழந்தையாக தவழும் புகைப்படத்தை ஷேர் செய்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
சென்னை பொண்ணு
பானு சந்திரன் மற்றும் நளினிக்கு மகளாக சென்னையில் பிறந்த நடிகை ஆத்மிகா, சென்னையில் உள்ள எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் தனது பட்ட படிப்பை முடித்தார். 2017ம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு இளம் ஹீரோயினாக அறிமுகமானார்.
எப்போ ரிலீசாகும்
மீசையை முறுக்கு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகை ஆத்மிகா நடித்த நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்கள் சில பல காரணங்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கின்றன. கோலிவுட்டில் அடுத்த பட வாய்ப்பை எதிர்பார்த்து இருந்த நிலையில், லாக்டவுன் போடப்பட்டதால், இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் மத்தியில் கனெக்டில் இருந்து வருகிறார் ஆத்மிகா.
இதை செய்யுங்கள்
தனது அப்பாவுடன் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, கடந்த ஜூன் 26ம் தேதி மாரடைப்பால் தனது தந்தை உயிரிழந்த துயர செய்தியை பகிர்ந்து கொண்ட நடிகை ஆத்மிகா, இந்த செய்தியை படிக்கும் நீங்கள், உங்கள் பெற்றோர்களை ஒரு நிமிடம் கட்டி அணைத்து, அன்பு செலுத்துங்கள், அவர்கள் இருக்கும் போது அவர்களின் அருமை உங்களுக்கு புரியாது என உருக்கமாக கூறியுள்ளார்.
ரசிகர்கள் இரங்கல்
ஆத்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அப்பா உயிரிழந்த விசயத்தை பதிவிட்டு, தனது வருத்தத்தை தெரிவித்த நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களையும், ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த தகவலை அறிந்த பிரபலங்களும் அவரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.