Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அ..ஆ.. இ.. ஈ... ரித்திகா சிங்கின் 'தமிழ்' வாத்தியாராக மாறிய விஜய் சேதுபதி!
சென்னை: தமிழ் கற்றுக் கொள்வது எப்படி என விஜய் சேதுபதி தனக்கு டிப்ஸ் வழங்கியதாக நடிகை ரித்திகா சிங் கூறியிருக்கிறார்.
இறுதிச்சுற்று படத்துக்குப்பின் ஆண்டவன் கட்டளை படத்தில் ரித்திகா சிங் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தை காக்கா முட்டை புகழ் மணிகண்டன் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியைப் பார்த்து தன் மிகவும் பயந்ததாக கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் ''விஜய் சேதுபதி மிகவும் அமைதியாக இருந்ததால் ஆரம்பத்தில் பயந்தேன்.
ஆனால் போகபோக அவரின் கலகலப்பான குணம் குறித்துத் தெரிந்து கொண்டேன்.தமிழ் கற்றுக் கொள்வது குறித்து எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறியதுபோல சப்-டைட்டில் இல்லாத தமிழ்ப்படங்களை பார்த்து தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.தற்போது நான் வேகமாக தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் விஜய் சேதுபதிதான் என்று அவருக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
ஆண்டவன் கட்டளை படத்துக்குப்பின் மீண்டும் ஒரு நேரடித் தமிழ்ப்படத்தில் நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தமாகியிருக்கிறார்.