விஷாலுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. முதல்வரை சந்தித்த ‘போர்க்கொடி’ தயாரிப்பாளர்கள்!
விஷாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள தயாரிப்பாளர்கள் முதல்வரை இன்று சந்தித்துள்ளனர்.
சென்னை: விஷாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள தயாரிப்பாளர்கள் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்துள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகர் விஷால் இருந்து வருகிறார். தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு குழு அவருக்கு எதிராக நேற்று சங்க வளாகத்தில் போராட்டம் நடத்தியது. நண்பகல் 12 மணியளவில் தயாரிப்பாளர்கள் டி.சிவா, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், உதயா, விடியல் சேகர் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க வளாகத்துக்கு வந்தனர்.

பொதுக்குழுவை கூட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை வலியுறுத்தி, அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று இயக்குநர் பாரதிராஜா உட்பட இந்த தயாரிப்பாளர்கள் குழு முதல்வர் பழனிச்சாமியை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் விஷால் பதவி விலக வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.



Click it and Unblock the Notifications











