நடுகாட்டில் மரத்தில் மல்லாக்க படுத்து தூங்கிய பிரபல தமிழ் நடிகை!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு உலகம் முழுவதும் பிரபலமானவராக மாறியுள்ளார் நடிகை ரித்விகா.
மெட்ராஸ் படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் கபாலி திரைப்படத்திலும் நடித்துள்ள ரித்விகா தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இப்பொழுது விஜய் சேதுபதியுடன் இணைந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் ரித்விகா நடுகாட்டில் மரத்தில் மல்லாக்க படுத்து வித்தியாசமாக நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

குணச்சித்திர வேடங்களில்
எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தக்கூடிய நடிகை ரித்விகா ஹீரோயினியாக சில திரைப்படங்களில் நடித்தும் அதேசமயம் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அவ்வாறு பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்து பலருக்கும் பரிச்சயமானார்.

முதல் முறையாக
கபாலி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, வால்டர் ஆகிய படங்களில் தொடர்ந்து எம்ஜிஆர் மற்றும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ரித்விகா முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் மிக விரைவிலேயே வெளியாக உள்ளது.

பல கோடி ரசிகர்களை
திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை கொண்டுள்ளார். நாளுக்கு நாள் சமூக வலைதளப் பக்கங்களில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வர விதவிதமான போட்டோ ஷூட்களிலும் தெறிக்க விட்டு வருகிறார்.

கொஞ்சம் கொஞ்சம் கிளாமர்
ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சம் கிளாமர் தெரிய அசத்தலான புகைப் படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த ரித்விகா தற்பொழுது நடுக்காட்டில் சாய்ந்தமரத்தில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு எடுத்த வித்தியாசமான புகைப்படங்கள் ரசிகர்களின் கண்ணை பறித்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











