கருப்பு சக்சஸ்தான்.. இத்தனை படங்களில் உருவி இருக்கீங்களே RJB.. இதெல்லாம் நியாயமானு கேட்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: சூர்யா, த்ரிஷா நடித்து ஆர்ஜே பாலாஜி எழுதி இயக்கி நடித்துள்ள படமான கருப்பு படம் தியேட்டரில் சூர்யா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. படம் பிளாக் பஸ்டர் ஹிட்டை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்படி இருக்கையில் கருப்பு படம் பல படங்களில் இருந்து உருவி, சொருவி உருவாக்கப்பட்ட படம் என்று நெட்டிசன் ஒருவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
செகண்ட் ஷோ தமிழ் என்ற எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக அவர் எழுதியுள்ளதாவது, " பழைய படங்கள்லருந்து copy அடிச்சு சீன் வெச்சா அட்லீயை கலாய்ச்சு தள்ளுற நம்ம social media சமூகம், RJ பாலாஜி மாதிரி இயக்குனர்களுக்கு free pass கொடுத்துடுறது வேடிக்கை தான்.. RJB does that with no shame, in every other film
'மூக்குத்தி அம்மன்' படத்தோட கதை, கேரக்டர்ஸ், முக்கியமான பல சீன்ஸ் 'PK' படத்துலருந்து அப்பட்டமா காப்பி அடிக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்துல அதை பத்தி கேள்வி கேட்ட பல பேரை, ட்விட்டடர்ல block பண்ணவும் செஞ்சார் பாலாஜி. படம் ரிலீஸ் ஆகி 1 வருஷம் கழிச்சு, 'PK படம் ரைட்ஸ் வாங்க என்கிட்ட காசில்ல, அதான் அப்படியே உருவி ஏலியனை சாமின்னு மாத்தி படம் எடுத்துட்டேன்'னு ஒரு இண்டர்வியூல கூலா சிரிச்சுட்டே சொன்னார்.

இப்போ 'கருப்பு' படத்துல 'Oh My God', 'காந்தாரா', 'Liar Liar'ன்னு எல்லா மொழி படங்கள்லருந்தும் வகை தொகை இல்லாம அடிச்சு வெச்சிருக்கார்.. ஒரு விஷயத்துல inspire ஆகி, அதை நம்ம ஆடியன்ஸ்க்கு ஏத்த மாதிரி serve பண்றது வேற.. அது பிரச்சினையே இல்ல. ஆனா, அப்படியே Ctrl X + Ctrl V போடுறதுலாம் worst max.
காப்பி: 'SSE' கன்னட படத்துல ஒரு moment வரும்.. ஜெயில்ல இருக்குற ஹீரோவை பார்க்க, வாரா வாரம் 60 கிலோமீட்டர் பஸ்ல travel பண்ணி போவாங்க ஹீரோயின். எப்படியும் ஹீரோ ரிலீஸ் ஆகிடுவாருங்குற நம்பிக்கை இருப்பாங்க. அந்த சமயங்கள்ல, எப்போவும் ரெகுலரா பஸ்ல தான் பார்க்குற ஒரு பாட்டிக்காக தன்னோட இடத்தை விட்டு கொடுப்பாங்க. அதுவே ஹீரோ ரிலீஸ் ஆக வாய்ப்பில்லைன்னு தெரிஞ்சு நம்பிக்கையிழந்து விரக்தியில இருக்கப்போ, அதே பாட்டி நிக்குறாங்கன்னு தெரிஞ்சும் கண்டுக்காம இருப்பாங்க. இதுவும், அப்படியே inch கூட மாறாம 'கருப்பு' படத்துல வருது.. பஸ்க்கு பதிலா கோர்ட், அவ்ளோதான் வித்தியாசம். இந்த மாதிரி ஏகப்பட்ட படங்கள்லருந்து உருவல், சொருவல் இருக்கு.
பிட் அடிச்சும் ஃபெயில்: 'கருப்பு' நல்லா ஓடிட்டு இருக்குங்குறது வேற விஷயம்.. ஆனா, 'Bit அடிச்சும் fail ஆகுறியே'ன்னு சந்தானம் சொல்ற மாதிரி.. இவ்ளோ படங்கலருந்தும் சீன்கள் வெச்சும், ரொம்ப சுமாரான படமா தான் இருக்கு. இதெல்லாம் பண்ணிட்டு, சும்மா இருந்திருந்தா கூட பரவாயில்ல.. ஆனா, 'நானும் என் writers டீமும், கடுமையா உழைச்சிருக்கோம்.. பல மாசமா, மூளையை கசக்கி பிழிஞ்சு ஒரு படத்தை கொடுத்திருக்கோம்'னு எல்லாம் பேட்டிகள்ல சொல்லிட்டு இருக்கார்.

இளையராஜா: இன்னொரு விஷயம்.. இந்த படத்துல ஒரு சீன்ல, இளையராஜா அவர்களோட copyright issueஅ கிண்டல் பண்ணியிருக்கார் பாலாஜி. 'போராடடா' பாட்டை ஒரு protestல யூஸ் பண்றப்போ, அந்த போராட்டத்தையே நிறுத்தணும்னு இளையராஜா கேஸ் போடுற மாதிரி ஒரு சீன் வருது. இளையராஜா அவர்களோட copyright issue பத்தி, மாற்றுக்கருத்து இருக்கலாம்; ஆனா, அவர் ஏதோ ஒரு போராட்டத்தையே நிறுத்துற அளவு கொடூரன்னு காட்டுறதுலாம் எவ்ளோ வன்மம். 'போராடடா' எல்லாம் வெறும் பாட்டு இல்ல, ஒரு emotion. பல்லாயிரக்கணக்கான பேர் வாழ்க்கையில, ஒரு அங்கம்ன்னே சொல்லலாம்.
தேவையா கோபி?: இதுல கூத்து என்னென்னா.. இளையராஜாவாவது தான் compose பண்ண பாட்டுக்கு தான், copyright அடிப்படையில ராயல்டி கேட்குறார். தன்னோட கேரியர் முழுக்க, copyright எதையும் மதிக்காம இஷ்டத்துக்கு உருவி சொருவி படமெடுக்குற பாலாஜி அவரை கிண்டல் பண்றாராம். இதெல்லாம் நமக்கு தேவையா, கோபி? என்று நேரடியாகவே காட்டமாக விமர்சித்துள்ளார். அவரது இந்த விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications