Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
யார்யா இந்த புது வில்லன்... இப்படி மிரட்டராரு!
சென்னை: பாலாவால் தாரை தப்பட்டையில் வில்லனாக அறிமுகம் செய்யப்பட்ட ஆர் கே சுரேஷ், இப்போது மருது படத்தின் மூலம் கோலிவுட்டில் பேசப்படும் நட்சத்திரமாகியிருக்கிறார்.
இவர் இதற்கு முன் ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர் (ஸ்டுடியோ 9).
ஆனால் இவரது நோக்கமெல்லாம் நல்ல நடிகனாக வேண்டும் என்பதுதானாம். அதனால் வாய்ப்புக்காகக் காத்திருந்தார். இப்போது தமிழ் சினிமாவுக்கு ஏற்ற வில்லன் இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு மிரட்டலான நடிப்பைத் தந்துள்ளார்.
மருது படத்தில் தனது கேரக்டருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்து நெகிழ்ந்து போன சுரேஷ், "எனக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு நெகிழ வைக்கிறது. இந்த அந்தஸ்து எனக்கு ஒரு நாளில் வந்ததில்லை. கடினமான உழைப்பும், தீராத நடிப்பு பசியும்தான் காரணம் என்பேன்.
நான் ஒரு இயக்குநரின் நடிகனாகத்தான் இருக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு நடிகனாக முகவரி தந்த பாலா சாருக்கு வாழ் நாள் முழுக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன்,' என்கிறார் தன முறுக்கு மீசையை தடவியபடி!