Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இயக்குநர் திருமலை வீட்டில் பெண்ணை கட்டிப் போட்டு நகை கொள்ளை!
தி நகர், அகம்புறம் போன்ற படங்களை இயக்கியவர் திருமலை. தற்போது காசே தான் கடவுளடா என்ற படத்தை இயக்கி வருகிறார். விரைவில் அந்த படம் வெளிவர உள்ளது.
திருமலைக்கு நேற்று திருமண நாள். இதையொட்டி அவர் தனது மனைவி நதியா மற்றும் குழந்தையோடு ஏலகிரிக்குப் போய் விட்டார். அங்கு அவர் தனது திருமண நாளை கொண்டாடினார். சென்னையில் அவரது வீட்டில் அவரது அக்கா மகள் பூர்ணிமா தனியாக இருந்தார்.
'கரண்ட்' போன நேரத்தில் புகுந்த களவாணிகள்
நேற்று பிற்பகல் 2 மணியளவில் சாலிக்கிராமம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. திருமலை வீட்டிலும் மின்சாரம் இல்லை. இதனால் அவரது அக்கா மகள் பூர்ணிமா காற்றுக்காக கதவை திறந்து போட்டுக்கொண்டு வீட்டு வாசலில் இருந்து உள்ளார்.
அப்போது மர்ம ஆசாமிகள் இருவர் திடீரென்று வீட்டுக்குள் நுழைந்து, கத்தியைக் காட்டி மிரட்டி பூர்ணிமாவை வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். சத்தம் போடக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர். பின்னர் அவரது வாயில் துணியை திணித்து சமையல் அறைக்குள் அவரை தள்ளி கை கால்களை கட்டிப்போட்டு உள்ளனர். பின்னர் சமையல் அறை கதவை பூட்டியிருக்கிறார்கள். சமையல் அறை முழுவதும் சமையல் கியாசையும் திறந்து விட்டு உள்ளனர். சத்தம் போட்டால் தீ வைத்து கொளுத்தி விடுவோம் என்றும் பயமுறுத்தியுள்ளனர்.
பின்னர் பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு மர்ம ஆசாமிகள் இருவரும் தப்பி ஓடி விட்டனர். மாலை 4 மணியளவில் டைரக்டர் திருமலையின் உறவினர் பாஸ்கரன் தற்செயலாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தான் கொள்ளை நடந்த விஷயம் தெரிந்தது. பூர்ணிமாவின் கை, கால் கட்டுகளை அவர் அவிழ்த்து விட்டு உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளார். இணை போலீஸ் கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் சம்பவ நடந்த வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து இயக்குநர் திருமலைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவரும் நேற்றிரவு ஏலகிரி மலையில் இருந்து வீடு திரும்பினார். 25 சவரன் நகை வரை கொள்ளை போய் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விருகம்பாக்கம் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ளனர்.
'நல்லவேளை, கொஞ்சமாத்தான் திருடு போயிருக்கு'
கொள்ளை சம்பவம் குறித்து இயக்குநர் திருமலை கூறுகையில், "திருட வந்தவர்கள் இரண்டுபேர். தமிழில்தான் பேசி இருக்காங்க. நல்ல வேளையாக வீட்டில் பெரிய அளவில் நகைகள் எதுவும் வைக்கவில்லை. வங்கி லாக்கரில் நகைகளை வைத்துள்ளேன். வீட்டில் கொஞ்சமாத்தான் வைத்திருந்தோம். அந்த நகைகளைத்தான் கொள்ளையர்கள் எடுத்துச் சென்று உள்ளனர்.
எங்கள் வீடு உள்ள பகுதிகளில் அடிக்கடி இது போல் கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.