Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா வீட்டில் தங்க, வைர நகைகள் கொள்ளை
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வீடு ஹைராபாத்தில் உள்ள ஜுபிளி ஹி்ல்ஸில் உள்ளது. கடந்த 24ம் தேதி அவருடைய மனைவி வசுந்தரா மகன் மற்றும் மகளுடன் விடுமுறையைக் கழிக்க வெளிநாட்டுக்கு கிளம்பிவிட்டார். பாலகிருஷ்ணா வெளியூரில் ஷூட்டிங்கில் இருந்தார். இந்நிலையில் வீட்டில் மராமத்து பணிகள் வேறு நடந்து வந்தது. அதை வசுந்தராவின் சகோதரியின் கணவர் பிரசாத் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
வசுந்தரா பிரசாத்துக்கு போன் செய்து வீட்டில் உள்ள பொருட்கள் பத்திரமாக உள்ளதா என்று பார்த்து வருமாறு கூறியுள்ளார். பிரசாத் வீட்டுக்கு சென்றபோது படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க ஒட்டியாணம், வைரத் தோடு, வைர நெக்லஸ், வைர பிரேஸ்லட், ரூபி நெக்லஸ், ஒமேகா வாட்ச் ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து ஜுபிளி ஹில்ஸ் போலீசில் பிரசாத் புகார் செய்தார். திருட்டு குறித்து போலீசார் விசாரி்தது வருகிறார்கள்.