twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா வீட்டில் தங்க, வைர நகைகள் கொள்ளை

    By Siva
    |

    Balakrishna
    தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் ஜுபிளி ஹில்ஸ் வீட்டில் இருந்து தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வீடு ஹைராபாத்தில் உள்ள ஜுபிளி ஹி்ல்ஸில் உள்ளது. கடந்த 24ம் தேதி அவருடைய மனைவி வசுந்தரா மகன் மற்றும் மகளுடன் விடுமுறையைக் கழிக்க வெளிநாட்டுக்கு கிளம்பிவிட்டார். பாலகிருஷ்ணா வெளியூரில் ஷூட்டிங்கில் இருந்தார். இந்நிலையில் வீட்டில் மராமத்து பணிகள் வேறு நடந்து வந்தது. அதை வசுந்தராவின் சகோதரியின் கணவர் பிரசாத் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

    வசுந்தரா பிரசாத்துக்கு போன் செய்து வீட்டில் உள்ள பொருட்கள் பத்திரமாக உள்ளதா என்று பார்த்து வருமாறு கூறியுள்ளார். பிரசாத் வீட்டுக்கு சென்றபோது படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க ஒட்டியாணம், வைரத் தோடு, வைர நெக்லஸ், வைர பிரேஸ்லட், ரூபி நெக்லஸ், ஒமேகா வாட்ச் ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து ஜுபிளி ஹில்ஸ் போலீசில் பிரசாத் புகார் செய்தார். திருட்டு குறித்து போலீசார் விசாரி்தது வருகிறார்கள்.

    English summary
    Adhinayakadu hero Balakrishna's house was robbed and diamond, gold jewels and omega watch are missing.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X