Don't Miss!
- News ‛‛பானை சின்னம் கிடையாது’’.. உறுதியான கூறிய தேர்தல் ஆணையம்.. திருமாவின் விடுதலை சிறுத்தைகள் ஷாக்
- Sports எங்களை ஏமாற்ற பார்க்காதீங்க! நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனி.. GT போட்டியில் நடந்தது என்ன?
- Lifestyle உங்க தலையணை இந்த மாதிரி இருந்தா நீங்க தலைவலி முதல் பல ஆபத்தான பிரச்சினைகள் வரை சந்திக்க வேண்டியிருக்குமாம்...!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவதுகூட முட்டாள்தனம் - ரகுராம் ராஜன்
- Automobiles 6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பின்னணி பாடகிகள் வீட்டில் 150 பவுன் கொள்ளை: திருடர்களுக்கு வலைவீச்சு!
சென்னை: திருவான்மியூர் பகுதியில் பின்னணி பாடகிகள் வீட்டில் நூதனமுறையில் 150 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சென்னையை அடுத்த திருவான்மியூர் வால்மீகி சிவார்ட் சாலையை சேர்ந்தவர் ஓ.எஸ்.மணி (வயது67). இவர் ஓய்வு பெற்ற சுங்க இலாகா அதிகாரி. இவருடைய மனைவி ஹேமலதா (62). இவர்களுக்கு சாருலதா, மதுமிதா என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் சினிமா பின்னணி பாடகிகளாக உள்ளனர்.
நேற்று மாலை மதுமிதா, சாருலதா ஆகியோர் வெளியே சென்றிருந்தனர். அப்போது மணியும் வெளியே சென்று வருவதாக கூறி சென்றார்.
வீட்டில் ஹேமலதா மட்டும் தனியாக இருந்தபோது, மின்சார வயர்களை பழுதுபார்ப்பதாகக் கூறி இரு இளைஞர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். ஹேமலதாவுக்கு கண்பார்வை சற்று குறைவு என்பதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி ரூ 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 150 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
மணி வீட்டுக்கு வந்த பின்னர் மின்சார வயர்களை சரி செய்ய இருவர் வந்து சென்றதை ஹேமலதா தெரிவித்தார். உடனே மணி பீரோவைப் பார்த்தார். அது திறந்து கிடந்தது. அதில் இருந்த 150 பவுன் தங்க மற்றும் வைர நகைகள், மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி திருவான்மியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.