Don't Miss!
- News அரசு பேருந்து கண்டக்டர் பறந்து விழுந்த விவகாரம்.. "அதிமுக ஆட்சி தான் காரணம்".. சொல்வது அமைச்சர்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சொந்த மாமாவால் பல கொடுமைகளை சந்தித்தேன்..பிக் பாஸ் பிரபலத்தின் கண்ணீர் பேட்டி!
மும்பை : பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரோகித் வர்மா சிறுவயதில் பாலியல் ரீதியாக அனுபவித்த கொடுமைகளை மனம் திறந்து கூறியுள்ளார்.
1999ம் ஆண்டு பிக் பிரதர் என்ற பேரில் ஒளிபரப்பான ரியாலிட்டி போட்டியாகும். இந்த நிகழ்ச்சியை ஜான் டி மோல் ஜூனியரால் உருவாக்கினார்.
மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சர்வதேச அளவில் மறு ஆக்கம் செய்யப்பட்டு பிக் பாஸ் என்ற பெயரில் இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகி வருகிறது.
”ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் ரெண்டுமே வேற வேற மாதிரி”: பங்கமாய் கலாய்த்த கார்த்தி
பிக் பாஸ்
இந்தியில் தான் ஒளிபரப்பினைத் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 6வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. அதே போல இந்தியில் 15 சீசன்கள் முடிந்து 16 வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.
ரோஹித் வர்மா
இந்நிலையில்,இந்தி பிக் பாஸ் இந்தி சீசன்3ல் கலந்து கொண்ட ஆடை வடிவமைப்பாளரான ரோஹித் வர்மா, தன் வாழ்க்கையில் நடந்த அவலங்களை கண்ணீர் மல்க கூறியுள்ளார். அதில், என் குடும்பம் மிகவும் பிற்போக்கு எண்ணத்தைக்கொண்ட குடும்பம் தான். ஆனால், அப்பா,அம்மா என அனைவரும் நல்லவர்கள்.
பாலியல் வன்கொடுமை
நான் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும், என் சொந்த மாமாவால், எட்டு வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன். எனக்கு புடவையை கட்டி, என் உடம்பில் சூடான மெழுகு பூசி, மேலும் கொடூரமான அத்துமீறல்களை அவர் செய்து இருக்கிறார். இந்த கொடுமை மூன்று நான்கு வருடங்களான எனக்கு நடந்தது. இது பற்றி பெற்றோரிடம் சொல்ல பயந்தேன்.
பாலியல் தொழில்
மேலும், தாஜ் ஹோட்டலுக்கு வெளியே பாலியல் தொழிலாளியாக வேலை செய்தேன், அந்த நேரத்தில் தனக்கு பணம் தேவைப்பட்டது. இங்கிருந்து கிடைத்த பணத்தை வைத்து நான் டிசைனிங் பொருட்களை வாங்கினேன். நான் இதை செய்ய விரும்பியதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
நடிகருடன் உறவில்
தொடர்ந்து,பேசிய ரோஷித் வர்மா, நான் ஒரு நடிகருடன் உறவில் இருந்தேன். அவருடன் ஒன்றாக சில வருடங்கள் வாழ்த்தேன். ஆனால் அவருக்கு வேலை கிடைத்து அதிகமாக சம்பளம் கிடைத்தது என்னை மறந்துவிட்டார். தற்போது நான் ஆடை வடிவமைப்பாளராகவும் மற்றும் மும்பையில் தனது ஸ்டுடியோவை வைத்திருக்கிறேன் என்று தனது வாழ்க்கையில் நடந்த சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டார்.