Don't Miss!
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
அதுக்கு ஆசை இருக்கு ஆனால் தைரியம் இல்லையே: மணிரத்னம் ஹீரோயின்
சென்னை: படம் இயக்கும் ஆசை உள்ளது ஆனால் அதற்கு தைரியம் இன்னும் வரவில்லை என்று நடிகை மது தெரிவித்துள்ளார்.
மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் பிரபலமானவர் நடிகை மது. ரோஜா படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியும் அதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
இது குறித்து மது பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
25 ஆண்டுகள்
ரோஜா படம் வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் பல உள்ளன. ஆனால் ரோஜா எனக்கு ஸ்பெஷலான படம் ஆகும். இந்த படத்தை தான் 25 ஆண்டுகள் கழித்தும் நினைவு வைத்துள்ளனர்.
பட வாய்ப்பு
மணிரத்னம் சாரின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆவலாக உள்ளேன். நானும் இருக்கிறேன் என்பதை நினைவூட்ட நான் மணி சாரை அவ்வப்போது சந்தித்து பேசுவது உண்டு.
கதை
தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றது. ஆனால் எனக்கு பிடித்த மாதிரி இல்லை. குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்களின் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.
ஆசை
படங்களை இயக்கினால் என்ன என்று சில நேரம் தோன்றும். ஆனால் அதற்கு தேவையான தொழில்நுட்ப அறிவு என்னிடம் இல்லை. என் நண்பர்களில் சிலர் சிறந்த ஒளிப்பதிவாளர்கள். அவர்கள் ஊக்கமளித்தாலும் தைரியம் வரவில்லை. ஒரு நாள் நான் படம் இயக்கலாம் என்றார் மது.