Don't Miss!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
நடிகை ரோஜாவுக்கு தமிழக அரசு கொடுத்துள்ள விருதை ஏலம் விட்டு கிடைக்கும் தொகையை வசூலித்துத் தர வேண்டும் என்று அவருக்குக் கடன்கொடுத்த முகுந்த் சந்த் போத்ரா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
1995 ம் ஆண்டு நடிகை ரோஜாவும், அவரது தம்பியும் திரைப்படம் எடுப்பதற்காக முகுந்த்சந்த் போத்ரா என்பவரிடம் ரூ 20 லட்சம் கடனாகவாங்கினர்.
ஆனால் இவர்கள் படம் எடுக்காததால் வாங்கிய பணத்தைத் திருப்பிக்கொடுக்குமாறு முகுந்த் சந்த் கேட்டார். அப்போது ரோஜா அவருக்கு 6 லட்சரூபாய் கொடுத்து விட்டு மீதிப்பணத்திற்கு செக் கொடுத்தார். அந்தச் செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது.
இந்நிலையில் போத்ரா கடன்தொகையை வசூல் செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ரோஜாவின்சம்பளத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யும்படி ரோஜாவை வைத்துப் படம் எடுக்கும் படஅதிபர்களுக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி, பட அதிபர்கள் ரோஜாவின் சம்பளத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்தனர். அப்படியும் முகுந்த் சந்த் போத்ராவுக்குக் கிடைக்கவேண்டிய முழு பணமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தமிழக அரசு ரோஜாவை சிறந்த நடிகையாகத் தேர்வு செய்து விருது வழங்கவுள்ளது. இந்த விருது 40 கிராம் எடையுள்ள தங்க மெடலாகும்.
எனவே அந்த விருதை ஏலம் விட்டு கடன்தொகையை நீதிமன்றம் வசூலித்துத் தர வேண்டும் என்று மீண்டும் ரோஜாவுக்கு எதிராக வழக்குத்தொடர்ந்துள்ளார் போத்ரா.