Don't Miss!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குழந்தை கடத்தல்: திரௌபதி நடிகையிடம் போலீஸ் துருவித் துருவி விசாரணை
கொல்கத்தா: குழந்தைகள் கடத்தல் தொடர்பாக சிஐடி அதிகாரிகள் நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான ரூபா கங்குலியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஒன்று குழந்தைகளை சட்ட விரோதமாக வெளிநாட்டினருக்கு தத்துகொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தைகள் கடத்தல் வழக்குப்பதிவு செய்த சிஐடி போலீசார் அந்நிறுவன தலைவர், பாஜக மாநில மகளிர் அணி தலைவர் ஜூஹி சவுத்ரி உள்ளிட்டோரை கைது செய்தனர்.
ஜூஹி சவுத்ரியுடன் தொடர்பு வைத்திருந்த நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான ரூபா கங்குலியிடம் சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மகாபாரதம் தொலைக்காட்சி தொடரில் திரௌபதியாக நடித்து புகழ் பெற்றவர் ரூபா.
ரூபாவின் வீட்டில் வைத்து இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இது அரசியல் நோக்கத்துடன் பழிவாங்கும் செயல். எனக்கு தெரியும். எனக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பு இல்லை. எங்கள் கட்சியை சேர்ந்தவரை தவறுதலாக இந்த வழக்கில் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜூஹி அப்பாவி. அவர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டிருக்க மாட்டார். இந்த வழக்கு விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றார்.