Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
குழந்தை கடத்தல்: திரௌபதி நடிகையிடம் போலீஸ் துருவித் துருவி விசாரணை
கொல்கத்தா: குழந்தைகள் கடத்தல் தொடர்பாக சிஐடி அதிகாரிகள் நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான ரூபா கங்குலியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஒன்று குழந்தைகளை சட்ட விரோதமாக வெளிநாட்டினருக்கு தத்துகொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தைகள் கடத்தல் வழக்குப்பதிவு செய்த சிஐடி போலீசார் அந்நிறுவன தலைவர், பாஜக மாநில மகளிர் அணி தலைவர் ஜூஹி சவுத்ரி உள்ளிட்டோரை கைது செய்தனர்.
ஜூஹி சவுத்ரியுடன் தொடர்பு வைத்திருந்த நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான ரூபா கங்குலியிடம் சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மகாபாரதம் தொலைக்காட்சி தொடரில் திரௌபதியாக நடித்து புகழ் பெற்றவர் ரூபா.
ரூபாவின் வீட்டில் வைத்து இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இது அரசியல் நோக்கத்துடன் பழிவாங்கும் செயல். எனக்கு தெரியும். எனக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பு இல்லை. எங்கள் கட்சியை சேர்ந்தவரை தவறுதலாக இந்த வழக்கில் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜூஹி அப்பாவி. அவர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டிருக்க மாட்டார். இந்த வழக்கு விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றார்.