Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நள்ளிரவில் தயாரிப்பாளரை வீடு புகுந்து தாக்கிய ஜோதிகா பட இயக்குநர்
கொச்சி: ஜோதிகாவை வைத்து 36 வயதினிலே படத்தை எடுத்த இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ஜோதிகாவை வைத்து 36 வயதினிலே படத்தை எடுத்த இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் மலையாள பட தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனின் வீட்டிற்கு சென்று அங்குள்ளவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
எர்ணாகுளத்தில் உள்ள ஆல்வினின் வீட்டிற்கு அடியாட்களுடன் சென்று ரோஷன் தாக்கினார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ஆல்வி ஆண்டனி ரோஷன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருமணமான பாஜக தலைவருடன் ஹோட்டலில் தங்கினேனா, ஆதாரம் இருக்கா?: நடிகை கோபம்
புகார்
ஆல்வின் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, ரோஷன் மற்றும் பலர் நள்ளிரவில் எங்கள் வீட்டிற்குள் புகுந்து எங்களையும், எங்களை பார்க்க வந்த டாக்டரையும் தாக்கினார்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தையை கூட மிரட்டினார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ரோஷன்
ஆல்வின் சொல்வதில் உண்மை இல்லை என்கிறார் ரோஷன். இது குறித்து அவர் கூறியதாவது, தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனியின் மகன் ஆல்வின் ஜான் மும்பை போலீஸ் மற்றும் ஹவ் ஓல்டு ஆர் யூ ஆகிய படங்களில் என்னிடம் உதவியாளராக பணியாற்றினார். அப்பொழுது அவர் போதைப் பொருள் பயன்படுத்தினார். கண்டித்தும் கேட்காததால் படக்குழுவில் இருந்து நீக்கப்பட்டார் என்றார் ரோஷன்.
நண்பர்
ஆல்வின் ஜானை நான் படக்குழுவில் இருந்து நீக்கியதால் அவர் என்னை பற்றி அவதூறு பரப்பி வந்தார். இது குறித்து கேட்டதற்கு தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனி என்னையும், என் நண்பர் நவாஸையும் தாக்கினார் என்று ரோஷன் கூறினார். இருப்பினும் ரோஷன், நவாஸ் ஆகியோர் நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றுள்ளனர். மேலும் தயாரிப்பாளர் ஆல்வின் மீது ரோஷன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்கம்
ரோஷன் ஆண்ட்ரூஸ் ஆல்வின் ஆண்டனியின் குடும்பத்தை தாக்கியதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் ரோஷன் ஆண்ட்ரூஸை வைத்து படம் எடுக்க விரும்புபவர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அனுமதி கேட்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ரோஷன் ஆண்ட்ரூஸுக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.