Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எஸ்பிபிக்கு இளையராஜா காப்பிரைட் நோட்டீஸ் அனுப்புவதா.. கங்கை அமரன் கோபம்!
சென்னை: காப்புரிமை பிரச்சனையை எழுப்பியுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதி இல்லாமல் எங்கும் பாடக் கூடாது என்று இசைஞானி இளையராஜா பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில் இது குறித்து இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் கூறியிருப்பதாவது,
இளையராஜா
எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருக்கக் கூடாது. இது முட்டாள்தனமானது. இளையராஜாவுக்கு நான் தான் என்ற அகங்காரம் இருக்கக் கூடாது.
மழை
இளையராஜாவின் இசை மழை போன்றது. அதை யார் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம், ரசிக்கலாம். பாடல்களுக்கு காப்புரிமை கேட்பது சரியல்ல.
கட்டுப்பாடு
ராயல்டி கொடுத்த பிறகு தான் மக்கள் என் பாடல்களை கேட்க வேண்டும் என்று இளையராஜாவால் நிபந்தனை விதிக்க முடியுமா? அவரின் பாடல்களை முணுமுணுக்கக் கூட ராயல்டி கேட்பாரா?
ராயல்டி
பாடகர்களிடம் ராயல்டி கேட்கிறாரே அவர் தியாகராஜ கீர்த்தனைகளை பாட ராயல்டி கொடுத்தாரா என்று கங்கை அமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.