Don't Miss!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இறுதிகட்ட ஷூட்டிங்கிற்காக வெளிநாடு செல்லும் ஆர்ஆர்ஆர் படக்குழு... வெளியானது புதிய தகவல்!
ஹைதராபாத் : ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலியின் இயக்கத்தில் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஆர் ஆர் ஆர்.
பாலிவுட் நடிகை ஆலியா பட் இதில் கதாநாயகியாக நடிக்க, நடிகர் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கொரோனாவுக்கு மத்தியிலும் பரபரப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு இப்பொழுது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ஆர்ஆர்ஆர் படக்குழு வெளிநாடு செல்ல உள்ளது.
ராம்சரண் படத்தை டைரக்ட் செய்ய ஜரூராக தயாராகும் இயக்குநர் ஷங்கர்... செப்டம்பரில் சூட்டிங்
பிரம்மாண்டமாக
அனைவரும் பிரமித்து பார்க்கக்கூடிய பிரம்மாண்ட படங்களை இயக்கி வசூலை அள்ளி வரும் இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக ஆர்ஆர்ஆர் திரைப்படம் உருவாகி வருகிறது. பாகுபலி இரண்டு பாகங்களும் சக்கைப்போடு போட்டு உலக அளவில் இந்திய திரைப்படங்களை உற்றுப் பார்க்க வைத்தது. பாகுபலி எந்த அளவிற்கு இந்தியாவில் வசூல் செய்ததோ அதே அளவுக்கு வெளிநாடுகளிலும் வசூலில் சக்கை போடு போட்டது.
400 கோடி
இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகர்களாக உள்ள ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து ராஜமெளலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைபடத்தில் நடித்து வருகின்றனர். பாகுபலியை போலவே பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகி வருவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை டிவிவி தானய்யா தயாரிக்கிறது.
ஜோடியாக ஆலியா பட்
1920 காலக்கட்டத்தில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர்களான சீதா ராமராஜீ, கோமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை காரணமாக பல முறை படப்பிடிப்பு தடைபட்டு இப்பொழுது மீண்டும் நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்,மலையாளம் என மொத்தமாக 5 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட் நடிக்க அஜய் தேவ்கன் இதில் வில்லனாக நடிக்கிறார் மேலும் நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பாடல் படப்பிடிப்பு
அக்டோபர் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழுவுக்கு சோதனையாக கொரோனா இரண்டாவது அலை பரவி தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இரண்டே இரண்டு பாடல்கள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் அதற்காக படக்குழு வெளிநாடு செல்ல உள்ளது. அதில் ஒரு பாடலை உக்ரைனில் உள்ள அரண்மனையிலும், மற்றொரு பாடலை ஐரோப்பாவிலும் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த பாடலில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் மற்றும் சிலர் இடம்பெறுவதால் இன்னும் ஓரிரு வாருங்கள் படக்குழு உக்ரைனுக்கு பறக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
-
Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!