Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஏடிஎம்மிலேயே சரியாக பணம் இல்லாதபோது சிறையில் வேந்தர் மூவிஸ் மதனிடம் ரூ.15,000 பறிமுதல்
சென்னை: மோசடி வழக்கில் புழல் சிறையில் இருக்கும் வேந்தர் மூவிஸ் மதனிடம் இருந்து ரூ.15 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதன் பிறகு ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு இன்னும் தீரவில்லை.
இந்நிலையில் மோசடி வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தயாரிப்பாளரான வேந்தர் மூவிஸ் மதனிடம் இருந்து போலீசார் ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.85 மோசடி செய்து தலைமறைவாக இருந்தவர் மதன். வட நாட்டில் சுற்றிய அவர் திருப்பூர் வந்து பதுங்கியிருந்தபோது போலீசாரிடம் சிக்கினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் உள்ள ஒருவரிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.